கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தின் அருகே உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை வியாழனன்று, மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மீ.தங்கவேல், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் திறந்து வைத்து பார்வையிட்டார்.