districts

img

மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி சிபிஎம் போராட்டம்: பேச்சுவார்த்தையில் தீர்வு

திருச்சிராப்பள்ளி, செப்.12- திருச்சி வடக்கு காட்டூர் குழந்தைஏசு தெருவில் வசித்து வந்தவர் கூலித் தொழிலாளி டேவிட் ரீகன் (38). இவருக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர்.  இந்நிலையில், டேவிட் ரீகன் திருச்சி ஆர்எம்எஸ் காலனி விரிவாக்க பகுதி யில் உள்ள தனியார் கார்மெ ண்ட்ஸ் கட்டிடத்தில் ஞாயி றன்று வேலை செய்து கொண்டிருந்த போது, மின்சாரம் தாக்கி சம்பவ  இடத்திலேயே உயிரிழந்தார்.  மேலும் இவருடன் வேலை  செய்த இருவர், மின்சாரம்  தாக்கியதில் படுகாயமடைந் தனர். இவர்கள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  உயர் மின் கம்பி களுக்கு கீழ் கட்டிடம் கட்ட முறைகேடாக அனுமதி வழங் கிய மாநகராட்சி அதிகா ரிகள் மற்றும் மின் இணைப்பு  வழங்கிய மின்வாரிய அதிகா ரிகள் மீது உரிய நடவ டிக்கை எடுத்து சம்பந்தப்பட் டவர்களை கைது செய்ய வேண்டும். உயிரிழந்த தொழிலாளி டேவிட்ரீகன் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத் தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, டேவிட் ரீக னின் உடலை வாங்க மறுத்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா  தலைமையில் டேவிட் ரீகன் குடும்பத்தினர் செவ்வா யன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர். இந்த முற்றுகை போராட் டத்தில் மாநிலக் குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா, சுமைப்பணி சங்க நிர்வாகிகள் சின்னதுரை, பிரபு, மாதர் சங்க மாவட் டச் செயலாளர் சரஸ்வதி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சேதுபதி, தரைக்கடை சங்க மாவட்டச் செயலாளர் செல்வி உள்பட  சிஐடியு, மாதர், வாலிபர் சங்கத் தினர் கலந்து கொண்டனர். பின்னர் வருவாய் கோட்ட அலுவலர் தலைமை யில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்பட்ட தையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.