districts

img

மாற்றுத்திறனாளிகளின் தேர்தல் விழிப்புணர்வு பேரணி

தஞ்சாவூர், மார்ச் 29-  நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கா ளர்கள் நேர்மையாக 100 சதவீதம் வாக்க ளிக்க வேண்டியதை வலியுறுத்தி “என் ஓட்டு என் உரிமை” எனும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு மூன்று சக்கர வாகன பேரணியை, தஞ்சாவூர் வரு வாய் கோட்டாட்சியர் இலக்கியா வெள்ளியன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  இந்தப் பேரணி தஞ்சாவூர் அருங் காட்சியகம் வளாகத்தில் இருந்து, மருத்து வக் கல்லூரி சாலை வழியாக, அன்னை சத்யா விளையாட்டு மைதானம் வரை நடை பெற்றது. இதில், சுமார் 200-க்கும் மேற்பட்ட  மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.  உதவி ஆட்சியர் (பயிற்சி) விஷ்ணு பிரியா மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவ லர் சீனிவாசன் மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.