districts

img

திருச்சி கேர் அகாடமியில் ‘சிகரம் நோக்கி’ விழா

திருச்சிராப்பள்ளி, செப்.17 - திருச்சி கேர் அகாடமியில் ‘சிகரம் நோக்கி’ எனும் கல்வி நிகழ்ச்சி ஞாயி றன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கேர் அகாடமி இயக்குநர் பேராசிரியர் முத்தமிழ்ச் செல்வன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தி னர்களான ஓய்வுபெற்ற மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கலியமூர்த்தி ‘வல்லமை தாராயோ’ எனும் தலைப்பிலும், கல்வியாளர் ஜெயபிரகாஷ் ‘காந்தி அறி வியல் வசப்பட’ எனும் தலைப்பிலும் பேசினர். நீட் தேர்வு மூலம் இந்தாண்டு மருத்துவ ரான மாணவர்கள், டிஎன்பிஎஸ்சியில் அதி காரிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்ப வர்கள், கல்லூரி விரிவுரையாளர் தேர்வில்  வென்றவர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம்  நடத்திய பி.ஜி. டிஆர்பி தேர்வில் வென்று  அரசு ஆசிரியர்கள் ஆனோர் என  நூற்றுக்கணக்கானோர் கௌரவிக்கப்பட்ட னர்.