districts

சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித்தொகையை நிறுத்தக் கூடாது சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஜூன் 23 -

    தஞ்சை மாநகர சிறுபான்மை மக்கள் நலக் குழு சார்பில், தஞ்சை பழைய பேருந்து நிலையம்  அருகே வியாழனன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாநகரத் தலைவர் அப்துல் நசீர் தலைமை வகித்தார்.  

   மாவட்டத் தலைவர் செந்தில்குமார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் ஜெயினுலாபுதீன், ஐஜேகே மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர் ராஜ், மக்கள் ஒற்றுமை மேடை வழக்குரைஞர் ஜீவகுமார், காங்கிரஸ் விவசாய அணி தலைவர் ஜேம்ஸ், கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் அருட்தந்தை மரிய தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகரச் செயலாளர் கோஸ்கனி வரவேற்றார்.  

   சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித் தொகைகளை தொடர்ந்து வழங்க வேண்டும். பா.ஜ.க அரசால் சிறுபான்மை மாண வர்களுக்கு நிறுத்தப்பட்ட இலவச மெட்ரிக் கல்வி உதவித்தொகை, மவுலானா ஆசாத் தேசிய  கல்வி ஊக்கத்தொகையை வழங்க வேண்டும். அயல்நாடுகளில் பயிலும் சிறுபான்மை மாண வர்களின் கல்விக் கடன், வட்டி மானியம் ஆகிய வற்றை நிறுத்தக் கூடாது. கல்வி உதவித்தொகை களை தொடர்ந்து வழங்க வேண்டும் என வலி யுறுத்தினர்.

    கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க மாநில பொதுக்குழு உறுப்பினர் பிரான்சிஸ், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் மாநகர செயலாளர் வடிவேலன், அறநெறி மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலா ளர் சார்லஸ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் உள்பட  பலர் கலந்து கொண்டனர்.