புதுக்கோட்டை, ஜூலை 28-
வாசகர்கள், மாண வர்களின் எழுச்சியான கொண் டாட்டத்திற்கிடையே புதுக்கோட்டை 6 ஆவது புத்தகத் திருவிழாவை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறி வியல் இயக்கமும் இணைந்து 6 ஆவது புதுக் கோட்டை புத்தகத் திரு விழாவை ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 6 வரை புதுக் கோட்டை நகர்மன்றத்தில் நடத்தி வருகிறது. இப்புத்த கத் திருவிழாவில் 75 பதிப் பகங்களிலிருந்து சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட அறிவியல், அரசியல், கவிதை, சிறுகதை, நாவல், வரலாறு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின்கீழ் புத்தகங்கள் 112 அரங்கு களில் வைக்கப்பட்டுள்ளன.
பள்ளி மாணவர்களின் பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகளுடன் எழுச்சி யுடனும் கொண்டாட்டத்துட னும் தொடங்கிய புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் தமிழ் நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்தார்.
அவர் சிறப்புரையாற்று கையில், “ஒவ்வொரு மனி தனும் தன்னைப் பற்றியும், தனது நாகரீகத்தைப் பற்றி யும் தெரிந்து கொள்வதற்கு வரலாறு மிக முக்கியமாகும். தமிழனின் வரலாறு 3000 ஆண்டிற்கு மேற்பட்ட பெரு மையைக் கொண்டது. நம்மு டைய வரலாற்றினை அறிந்து கொள்வதற்கு புத்தகங்கள் மிக முக்கியமான பங்களிப் பைச் செலுத்துகின்றன. நம்மை நாமே அறிந்து கொள் வதற்கும், சமூகத்தைப் புரிந்து கொள்வதற்கும் வாசிப்பு பழக்கத்தை வளர்த் துக்கொள்ள வேண்டும். விலை மதிப்புமிக்க செல்வம் கல்வி. இதை நம்மிட மிருந்து யாராலும் பறிக்க முடியாது. யாராலும் திருட முடியாத சொத்து கல்வியும், வாசிப்பும் மட்டுமே.
சிறந்த பொருளாதா ரத்தை ஈட்டுவதற்குக்கூட கல்வி மிகவும் அவசியமா கிறது. தமிழனின் வளர்ச்சி யில் பெரும் பங்கு வகிப்பது கல்வி. அப்படிப்பட்ட கல்விச் செல்வத்தினை அனைவருக்கும் அளிக்க வேண்டும் என்ற அடிப்படை யில், தமிழக அரசு பல் வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. வாசிப்பு பழக்கத்தை மாணவ, மாண விகளிடம் ஏற்படுத்தும் வகை யில் அனைத்துப் பள்ளி களிலும் நூலகத்திற்கான கட்டமைப்பு வசதிகள் மேம் படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மதுரையில் வரலாற்று சிறப்புமிக்க “கலைஞர் நூற் றாண்டு நூலகம்” முதல மைச்சரால் திறந்து வைக்கப் பட்டுள்ளது.
தமிழனின் அடையாள மாக விளங்கும் வாசிப்புப் பழக்கத்தை மேலும் வளர்க்கும் வகையில், புதுக்கோட்டை நகர்மன்றத் தில் 10 நாட்கள் நடை பெறும் புத்தகத் திருவிழா வில் மாவட்ட மக்களும், மாணவர்களும் பங்கேற்று, தங்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்கிப் படித்து பயன்பெற வேண் டும்” என்றார்.
சட்டமன்ற உறுப்பினர் கள் எம்.சின்னதுரை (கந்தர் வகோட்டை), டாக்டர்.வை. முத்துராஜா (புதுக் கோட்டை), காவல்துறை திருச்சி சரக துணைத் தலை வர் (சிறைத்துறை) ஜெய பாரதி மற்றும் ஒருங்கி ணைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.