districts

img

உறுதியாகும் கள்ளக் கூட்டணி பாஜகவை விமர்சிப்பதற்கு அஞ்சி நடுங்கும் எடப்பாடி

திருச்சிராப்பள்ளி, மார்ச் 25- திருச்சியில் நடந்த அதிமுக பிரச்சார தொடக்க விழாவில் திமுக வை கடுமையாக தாக்கி பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்  பாடி பழனிசாமி, வழக்கம்போல பாஜக பற்றி வாயே திறக்க வில்லை.

 அதிமுக - பாஜக இடையே மறை முகமாக ஒரு கள்ளக்கூட்டணி இருப்பதாக குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில், அதனை உறு திப்படுத்தும் விதமாக எடப்பாடி யின் திருச்சி கூட்டம் இருந்துள் ளது. எய்ம்ஸ் மருத்துவமனைக்காக திமுக-வை விமர்சித்த எடப்பாடி  பழனிசாமி, அதற்கு 5 ஆண்டு களுக்கு முன்பு அடிக்கல் நாட்  டிய பிரதமர் மோடி குறித்தோ, இப்போது வரை கட்டி முடிக்காத பாஜக அரசு குறித்தோ ஒரு வார்த்தை பேசவில்லை.

அதுமட்டுமல்ல, தேர்தல் பத்திரம் தொடங்கி சிஏஏ  வரை பேசிய எடப்பாடி, இதற்கு கார ணமான பாஜக பற்றி மறந்தும் வாய் திறக்கவில்லை. பாஜக  கொண்டுவந்த சிஏஏ-வை ஆத ரித்து வாக்களித்து, சிறுபான்மை மக்களுக்கு துரோகம் செய்ததே அதிமுகதான்.

 இந்நிலையில், பாமகவை எல்  லாம் தாக்கும் எடப்பாடி, பாஜக  பற்றி பேச மறுப்பதற்கு கள்ளக் கூட்டணியே காரணமாக இருக்க லாம் என்கின்றனர் அரசியல் பார்  வையாளர்கள். பாஜகவுடன் கூட்ட ணியை முறித்துவிட்டோம் என்று  எடப்பாடி பழனிசாமி கூறினாலும் கூட- மறைமுகமாக கள்ளக் கூட்  டணி தொடருவதால், பாஜகவை  விமர்சிக்க எடப்பாடி தயங்கு கிறார்; அஞ்சுகிறார் என்கின்றனர்.