சீர்காழி, ஜன.17 - மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளி டம் அருகே எருக்கூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிய ளிப்புத் திட்டத்தின் கீழ் கடந்த 2017 ஆம் ஆண்டு மண்புழு உரம் தயாரிக்கும் கூடம் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இரண்டு பக்கங்களிலும் 8 சிமெண்ட் கான்கிரீட் தொட்டிகள் அமைக்கப்பட்ட இந்த கூடத்தின் தரைப்பகுதி, சிமெண்ட் கான்கிரீடால் அமைக்கப்பட்டது. இக் கூடத்தின் மேற்பகுதி கூரையால் வேயப்பட் டுள்ளது. மண்புழு வளர்வதற்கு ஏற்ற தட்ப வெப்ப சூழ்நிலை ஏற்படும் என்பதால் மேற்கூரை மட்டும் தென்னங்கீற்றால் அமைக்கப்பட்டுள் ளது. இதனை கட்டி முடிக்க 51 நாட்கள் ஆனது. ஆனால் கட்டப்பட்ட நாளிலிருந்து இதுவரை இந்த மண்புழு உரம் தயாரிக்கும் கூடம் செயல்ப டவும் இல்லை. இதனை பராமரிக்க நடவ டிக்கை எடுக்கவுமில்லை. இதனால் இந்த கட்டி டத்தின் மேற்கூரையில் உள்ள கீற்றுகள் அனைத்தும் காற்றில் பறந்து சென்றுவிட்டன. கொட்டகை மட்டும் மூங்கில் மரங்களுடன் எலும்புக்கூடு போல் காட்சி அளிக்கிறது. பயிருக்கு இயற்கை உரம் விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டு, அதன் அடிப்ப டையில் ஊராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள இந்த மண்புழு உரம் தயாரிக்கும் கூடம், கடந்த மூன்று வருடங்களாக எந்த பயனும் இல்லா மல் வீணாக காட்சி தருகிறது. எனவே இதனை பயன்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.