districts

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர், ஜூன் 24-

     தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தஞ்சை நகரிய உதவி செயற்பொறியாளர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தஞ்சை நகர் பொதுமக்கள் நலன் கருதி மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் ஜூன் 27 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 11 மணி  முதல் மதியம் 1 மணி வரை தஞ்சை மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில், தஞ்சை நீதிமன்றச் சாலையில் உள்ள நகரிய செயற்பொ றியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.  

    எனவே, தஞ்சை நகரியக் கோட்டத்திற்கு உட்பட்ட நகர் எல்லை யான தெற்கு கரந்தை, பள்ளியக்ரஹாரம், கீழவாசல், தொல்காப்பியர் சதுக்கம், மேரீஸ் கார்னர், அருளானந்த நகர், பர்மாகாலனி, நிர்மலா நகர்,  யாகப்பா நகர், அருளானந்தம்மாள் நகர், பழைய வீட்டு வசதி வாரி யம், காந்திஜி சாலை, மருத்துவக் கல்லூரி சாலை, நீலகிரி, மானோஜிப் பட்டி, ரஹ்மான் நகர், ரெட்டிப்பாளையம் சாலை, சிங்கபெருமாள் கோவில், ஜெபமாலைபுரம், வித்யா நகர், மேலவெளி பஞ்சாயத்து, தமிழ்ப் பல்கலைக்கழக வளாக குடியிருப்பு, மாதாக்கோட்டை சாலை, புதிய பேருந்து நிலையம், திருவேங்கட நகர், இனாத்துக்கான்பட்டி, நட்சத்திரா நகர், நாஞ்சிக்கோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் நேரில் வந்து மனு அளிக்கலாம்.

     இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.