கடமலைக்குண்டு, பிப்.24- தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் வெள்ளிமலை வனப்பகுதி யில் இருந்து மூல வைகை ஆறு உற்பத்தி யாகிறது. கடந்த சில மாதங்களாக வெள்ளி மலை வனப்பகுதியில் போதிய அளவில் மழை இல்லை. இதனால், நீர்வரத்து படிப்படியாக குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில வாரங்க ளாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப் படுவதால் தற்போது ஆற்றில் நீர்வரத்து மிக குறைந்த அளவிலேயே உள்ளது. தொட ர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப் படுவதால் அடுத்த சில நாட்களில் வைகை ஆறு வறண்டு விடும் நிலை உள்ளது. கோடை காலம் தொடங்குவதற்கு முன் பாகவே தற்போது கடமலை-மயிலை ஒன்றி யத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் ஆறு வறண்ட பின்பு அதில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து அடுத்து தொடங்க உள்ள கோடை காலத்தின் போது கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மாவட்ட அதிகாரிகள் கிரா மங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயத்தை போக்கும் வகையில் புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்தல் உள்ளிட்ட முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.