இராமநாதபுரம், ஏப்.26- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இளைஞர்கள் ஒன்றி ணைந்து, ‘போதை புழக்கம் இல்லாத கீழக்கரையை உருவாக்கிட வேண்டும்’ என்ற நோக்கத்தோடு “கீழை கிழக்குநகர் பொதுநல சங் கம்” என்ற பெயரில் சங்கம் ஒன்றை உருவாக்கியுள்ள னர். இதன் மூலம் கீழக்கரை பட்டாணியப்பா பகுதியில் விழிப்புணர்வு பிரச்சா ரத்தை ஆரம்பித்து முக்கிய சாலைகளில் துண்டு பிரசு ரங்கள் வழங்கி போதைப் பொருளினால் ஏற்படும் தீமைகளை எடுத்துரைத்த னர். மேலும் பெற்றோர்கள் பிள்ளைகளை கவனமாக கண்காணிக்க வேண்டும். 18 வயதிலிருந்து 25 வய துக்குட்பட்ட பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தி னர். கீழக்கரையில் போதைப் பொருள் வியாபாரிகள், குறிப்பாக 18 வயதில் இருந்து 25 வயதுக்குட்பட்ட இளை ஞர்களை தேர்வு செய்து, அவர்களை மூளைச் சலவை செய்து ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கு உண்டான வழிமுறைகளை வழங்கி, அவர்கள் தவறான வழியில் செல்வதற்கு உறுதுணை யாக இருக்கின்றனர். சமீபத்தில் கீழக்கரை யில் இரு வாலிபர்களை கத்தி யால் குத்தி கொலை முயற்சி யில் ஈடுபட்டது கீழக்கரை மக்களிடையே பெரும் பதற்றத்தையும் வருத்தத் தையும் ஏற்படுத்தியது. எனவே பெற்றோர்கள், தங்க ளது பிள்ளைகளை கண்கா ணிக்க வேண்டும். உங்கள் அருகில் உள்ளவர்கள் போதைப் பொருள் விற்பனை செய்தால் உடனடியாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல் துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றனர். இந்நிகழ்வில் இளை ஞர்கள் மற்றும் முக்கிய பிர முகர்கள் கலந்து கொண்டனர்.