திருச்சிராப்பள்ளி, ஆக.8-
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆகஸ்ட் 11 அன்று மாபெரும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் திங்களன்று மாவட்ட ஆட்சியரகத்தில் நடந்தது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், “ஆகஸ்ட் 11 அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி களில் மாணவ, மாணவியர்கள் பங்குபெறும் மாபெரும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி நடை பெறவுள்ளது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆக.11 அன்று காலை 11 மணிக்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை மாணவ, மாணவியர்கள் எடுக்க வேண்டும். அது தொடர்பான புகைப்படங்களை அறிவுறுத்தியவாறு படிவத்தில் பதிவு செய்து உடனடியாக அனுப்பிட வேண்டும்.
மேலும், போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி களாக பள்ளி மாணவர்களை கொண்டு தொடர் ஜோதி ஓட்டம் மற்றும் சைக்கிள் பேரணி, காவலர்கள் பங்குபெறும் மோட்டார் சைக்கிள் பேரணியை நடத்திட வேண்டும். போதை ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அரிஸ்டோ மேம்பாலத்தில் ஓவியம் வரைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். திருச்சி மாவட்டம் இந்நிகழ்ச்சி யை சிறப்பான முறையில் நடத்தி வெற்றியடைய, அனைத் துத் துறை அலுவலர்களும் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும்” என்றார்.