districts

img

அக்னிபாத் திட்டத்தை கைவிடுக! வாலிபர் சங்கம் எழுச்சிப் போராட்டம்

மயிலாடுதுறை, ஜூன் 19 -  இந்திய ராணுவத்தில் ஒப்பந்த அடிப் படையில் வீரர்களை சேர்க்கும் அக்னி பாத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின்  சார்பாக ஜூன் 18, 19, 20 ஆகிய மூன்று  தினங்கள் தொடர் போராட்டங்கள் நடை பெறுகின்றன. அதனொரு பகுதியாக டெல்டா மாவட்டங்களின் பல்வேறு இடங் களில் வாலிபர் சங்கத்தினர் போராட் டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 ஆவது நாளாக இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட் டங்கள் நடைபெற்றன. மயிலாடுதுறை -  திருவாரூர் சாலை முக்கூட்டில் சங்கத் தின் மாவட்டத் தலைவர் அறிவழகன் தலைமையில் போராட்டம் நடை பெற்றது. ஆக்கூரில் சங்கத்தின் ஒன்றிய  செயலாளர் அனீஷ் ரஹ்மான் தலைமை யில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் ஐயப்பன், பவுல் சத்தியராஜ், முன்னாள் மாவட்ட  துணைச் செயலாளர் கே.பி.மார்க்ஸ்,  வீ.எம்.சரவணன், ஒன்றிய பொருளா ளர் சபீர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். குத்தாலம் கடைவீதியில் நடை பெற்ற போராட்டத்தில், மோடிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்

தஞ்சாவூர்
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தஞ்சை  மாநகரச் செயலாளர் யூ.காதர் உசைன்  தலைமை வகித்தார். மாநகரத் தலை வர் சே.ஹரிபிரகாஷ் முன்னிலை வகித் தார். மாவட்டத் தலைவர் ஆம்பல் துரை  ஏசுராஜா போராட்டத்தை விளக்கி கண்டன உரையாற்றினார். போராட் டத்தில் அம்மாபேட்டை ஒன்றியச் செய லாளர் உ.சரவணன், ஒரத்தநாடு ஒன்றியச் செயலாளர் செ.பெர்னாட்ஷா, மாநகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.  அப்போது, அக்னிபாத் திட்டத் திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய  வாலிபர்கள், தரையில் தண்டால் எடுத்து  நூதன போராட்டம் நடத்தினர்.

கும்பகோணம்
கும்பகோணம் மீன் மார்க்கெட் அருகில் வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கும்பகோணம் நகரச் செயலாளர் ரஞ்சித் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஆம்பல் ஏசுராஜா, மாவட்ட பொருளாளர் ராமன்,  குடந்தை ஒன்றிய தலைவர் தமிழ் இனியன், திருப்பனந்தாள் ஒன்றிய செய லாளர் ஏ.எஸ்.பாரதி கண்டன உரை யாற்றினர்.
குடவாசல்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம்  ஒன்றியம் பேரளம் கடைவீதியில் நடை பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க நன்னிலம் ஒன்றியச் செயலா ளர் கே.எம்.பாலா தலைமை வகித்தார்.  மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, மாவட்டத் தலைவர் எஸ்.எம்.சலாவுதின் ஆகி யோர் கண்டன உரையாற்றினர்.