கும்பகோணம், ஜன. 3 - தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கூகூர் ஊராட்சி கீழத்தெருவில் பட்டியலின வகுப் பைச் சேர்ந்த சுமார் 50 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. கடந்த ஆட்சியில் இந்த தெருவில் இப்பகுதி மக்களின் குடிதண்ணீருக்காக கீழ்த ளத்தில் ஒரு மினி டேங்க் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த டேங்கின் குடி தண்ணீரை உபயோகப்படுத்த முடியாமல் புழு, பூச்சிகளுடன் உள்ளது. இதற்கு கூகூர் ஊராட்சி நிர்வாகத்தில் பணி புரியும் கீழத்தெரு குடிநீர் தேக்கத் தொட்டி பராமரிப்பாளர் சரியாக சுத்தம் செய்யாத தால்தான் சுகாதாரமற்று கிடப்பதாக கூறப் பட்டுகிறது. இதனால் நோய்த்தொற்று பரவும் அபாயம் இருப்பதால் அந்த நீர்த்தேக்க தொட்டியில் உள்ள குடிநீரை குடிப்பதற்கு அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இது தொடர்பாக கூகூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பணியாளர்களிடம் தெரிவித்தும் பயன் இல்லாததால், திருவிடைமருதூர் வட்டார வளர்ச்சி அலுவலரை நேரில் சந்தித்து மனுக்களாக கொடுத்தும் எவ்வித நடவடிக் கையும் எடுக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் பட்டியலின மக்கள் வசிக் கும் தெரு என்பதால் நிராகரிக்கப்படுகிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனவே உட னடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்களைத் திரட்டி நூதன போராட்டம் நடைபெறும் என பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.