districts

குடவாசல், வலங்கைமானில் தூர்வாரும் பணி மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவாரூர், மே.9

     திருவாரூர் மாவட்டம்,குடவாசல், வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வாய்க்கால்கள் தூர்வா ரும் பணியை  மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ  ஆய்வு செய்தார்.

    குடவாசல் வட்டத்தில் ஆர்பாவூர் வாய்க்கால் 6.00 கி.மீ, உத்திரங்குடி, வாய்க்கால் 6.50 கி.மீ, கீரந்தக்குடி வாய்க்கால் 2.50 கி.மீ., மற்றும் சிட்டிலிங்கம் வாய்க்கால் 3.50 கி.மீ வரை தூர்வாரும் பணி  நடைபெறுகிறது.

    வலங்கைமான் வட்டத்தில் நத்தம் வாய்க்கால் 3.50 கி.மீ, பாடகச்சேரி வாய்க்கால் 3.00 கி.மீ மற்றும் செம்மங்குடி வாய்க்கால் 4.00 கி.மீ, வடக்குபட்டம் கிரா மம் கிளியன் வாய்க்கால் 8.50 கி.மீ, நார்த்தாங்குடி வாய்க்  கால் மற்றும் மாணிக்கமங்கலம் வாய்க்கால் 4.00 கி.மீ மற்றும் 6.50 கி.மீ, மருதடி வாயக்கால் 3.50 கி.மீ வரை தூர்வாரும் பணி நடைபெறுகிறது. இப் பணிகளைப் பார்வையிட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தூர்வாரும் பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார்கள்.

   ஆய்வின் போது, செயற்பொறியாளர் (வெண்ணாறு, தஞ்சாவூர்) மதனசுதாகரன், வலங்கைமான் வட்டாட்சியர் அன்பழகன், குடவாசல் வட்டாச்சியர் குருநாதன் ஆகி யோர் உடனிருந்தினர்.