கரூர், செப்.8 - கரூர் மாவட்டத்தில் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தில் பட்டியலின பெண்கள் சமையல் செய்வதால், மற்ற சாதி பெற்றோர்கள் மாணவ, மாணவிகளை உணவு உண்ண விடா மல் தடுத்து வருகின்றனர். இதற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்ட னம் தெரிவித்துள்ளது. கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியம், பொருந்தலூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை சுமார் 120 குழந் தைகள் படித்து வருகின்றனர். இங்கு தமிழக முதலமைச்சர் அறிவித்த காலை உணவு திட்டத்தில் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த செல்வி, சாந்தா மணி ஆகியோர் சமையலர்களாக பணி யாற்றி வருகின்றனர். பள்ளியில் படிக்கும் 120 மாணவ, மாணவிகளில் 70 பேர் மட்டும்தான் காலை உணவு திட்டத்தில் சாப்பிடு கிறார்கள். மீதியுள்ள 40 குழந்தைகள் பிற சாதியைச் சேர்ந்தவர்கள். ஆதிதிரா விடர் வகுப்பைச் சேர்ந்த பெண்கள் சமைப்பதால், 40 மாணவ, மாணவி களை காலை உணவு சாப்பிட விடாமல், அவர்களின் பெற்றோர்கள் காலை உணவு திட்டத்தை புறக்கணித்து வரு கிறார்கள். இதுகுறித்து தகவல் கிடைத்தவு டன் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கரூர் மாவட்ட பள்ளி ஆய்வுக்குழு உறுப்பினர் ஏ.சுப்பிரமணி யன் மற்றும் பொருந்தலூர் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் கே.மனோ கர், சரிதாஜானகிராமன் ஆகியோர் பள்ளிக்கு நேரடியாக சென்று தலைமை ஆசிரியர் வேலுமணி மற்றும் சமையல் செய்பவர்களை சந்தித்து உண்மை நிலவரத்தை கேட்டறிந்தனர்.
அதிகாரிகள் ஆய்வு
கேட்டறிந்த தகவல்களின்படி, தோகைமலை ஊராட்சி ஒன்றிய திட்ட அலுவலர் ராஜேந்திரனிடம் புகார் அளிக் கப்பட்டது. இதனையடுத்து தோகை மலை ஊராட்சி ஒன்றிய திட்ட அலுவ லர் ராஜேந்திரன் வெள்ளிக்கிழமை நேர டியாக பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியர், சமையலர் ஆகியோரிடம் விபரங்களை கேட்டறிந்தார். பின்னர் காலை உணவு திட்டத்தை புறக்கணிக்கும் 40 குழந்தைகளின் பெற்றோர்களை நேரில் வரவழைத்து விவரம் கேட்டு, ‘பள்ளியில் அனை வரும் சமம், சாதி பாகுபாடுகள் கூடாது’ எனக் கூறியதன் அடிப்படையில் 40 பேரில், 20 பேர் எங்கள் குழந்தைகளை சாப்பிட வைக்கிறோம் என்று உறுதி கூறினர். மீதமுள்ள குழந்தைகளின் பெற் றோர்களும் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை திங்கள்கிழமை முதல் சாப்பிட அனுமதிக்க வேண்டும்; திங்கள்கிழமையிலிருந்து அனைத்து குழந்தைகளும் காலை உணவுத் திட்டத் தில் சாப்பிடுகிறார்களா என்று அதிகாரி களால் கண்காணிக்கப்படும் என்று கூறி னார். இந்த கூட்டத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர், குழந்தைகளின் பெற்றோர், வார்டு உறுப்பினர்கள், தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆய்வுக்குழு உறுப்பினர் ஏ.சுப்பிரமணி யன் ஆகியோர் கலந்து கொண்டனர்
தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் காலை பசியை போக்கிடவும், அவர்களின் கல்வி அறிவை ஊக்கப்படுத்திடவும் கொண்டு வந்த அற்புதமான திட்டங்களில் ஒன்று காலை உணவு திட்டம். இந்த திட்டத்தில் அருந்ததியர், ஆதி திராவிடர் உள்ளிட்ட பட்டியலின வகுப்பு களை சேர்ந்த பெண்கள் சமைக்கும் உணவுகளை, மற்ற சாதியை சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்கள் தங்க ளது குழந்தைகளை உணவு உண்ண விடாமல் தடுத்து வருகின்றனர். இச் செயலை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. மேலும் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சாதி என்றால் என்னவென்று தெரியாத இந்த வயதில், சாதியை புகுத்தி மாணவர்களிடையே நிலவும் சமத்துவத்தை உடைத்து, மன தில் விஷத்தை விதைக்கும் இச்செயலை பெற்றோர்கள் கைவிட்டு, அனைவரும் சமம் என்பதை குழந்தை களுக்கு அறிவுறுத்த வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இந்நிலை தொடர்ந்தால் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் போராட்டங்களை நடத்தப்படும். ஆட்சியருக்கு வேண்டுகோள் மாவட்ட ஆட்சியர், தீண்டா மைக்கு எதிரான அனைத்து நடவ டிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறார். இதேபோன்று அரவக் குறிச்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு பள்ளியில் பட்டியலின பெண் சமைத்த காலை உணவை புறக்கணித்த பெற் றோர்களை அழைத்து, கண்டிப்பாக அனைத்து மாணவர்களும் உணவு உண்ண வேண்டும்; அனைவரும் சமம் என்று அறிவுறுத்தினார். இதனை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்பதுடன், கரூர் மாவட்டத்தில் தீண்டாமைக்கு எதி ரான வலுவான கட்டமைப்பை கரூர் மாவட்ட ஆட்சியர் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கிறோம் என தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பள்ளிகள் ஆய்வு குழு உறுப்பினர் எ.சுப்பிரமணியன் தெரிவித்தார்.