districts

img

தரைக் கடைகளை அகற்றக் கூடாது! மாநகராட்சி முன்பு வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 15 - அடையாள அட்டை வழங்கப்பட்டு 15 ஆண்டுகளுக்கும் மேலாக தரைக்கடை நடத்தும் தரைக் கடைகளை மாநகராட்சி  அகற்றக்கூடாது என்று மதுரை உயர்நீதி மன்றம் தடை உத்தரவு  பிறப்பித்துள்ளது. இருப்பினும் திருச்சி மாநகராட்சி பகுதியில் உள்ள தரைக் கடைகளை அகற்ற மாநக ராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வரு கிறது.  இதனை கண்டித்தும், திருச்சி மத்திய  பேருந்து நிலையத்தில் உள்ள தரைக்கடை களை அகற்றுவதை கைவிட வேண்டும். அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். கடை  நடக்கும் இடத்தை குறிப்பிட்டு அடையாள அட்டை வழங்க வேண்டும். வெண்டிங் கமிட்டி அமைத்து 2014 சட்டத்தின்படி உரிய  நடைமுறைகளை கடைபிடிக்காமல் தரைக் கடைகளை அகற்றுவதை கைவிட வேண்டும். தரைக்கடைகளை நடத்த மாமுல் கேட்ப வர்களிடம், மாமுல் தருவதற்கு வியாபாரி களை நிர்ப்பந்திக்கும் மாநகராட்சி அதிகாரி கள் திடீர், திடீரென கடைகளை அகற்றுவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தள்ளுவண்டி தரைக்கடை மற்றும் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை திருச்சி மாநகராட்சி அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு தரைக்கடை சங்க மாவட்டச் செயலாளர் செல்வி தலைமை  வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு  மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட  தலைவர் ராமர், தரைக்கடை சங்க மாவட்ட  தலைவர் கணேசன் ஆகியோர் பேசினர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்ட னர்.