திருச்சிராப்பள்ளி, ஜன.28 - யுனைடெட் இந்திய இன்சூரன்ஸ், நேஷ னல் இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ், நியூ இந்தியா அஸ்ஸுரன்ஸ் போன்ற அரசு துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கு வதை கைவிட வேண்டும். ஆகஸ்ட் 2017 முதல் வழங்க வேண்டிய ஊதிய திருத்தம் 53 மாதங்களாக வழங்காமல் காலம் தாழ்த்து வதை கைவிட்டு உடனே வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொது இன்சூ ரன்ஸ் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் வெள்ளிக்கிழமை திருச்சி கண்டோன் மென்ட் பகுதியில் உள்ள நேஷனல் இன்சூ ரன்ஸ் அலுவலக வளாகத்தில் ஒருநாள் வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் அதிகாரிகள் சங்க தலைவர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க துணைத் தலைவர் ராஜமகேந்திரன், மாவட்ட செயலா ளர் முத்துக்குமரன், மண்டல இணை செயலா ளர் ராஜன், என்.எப்.ஜி.ஐ.இ.ஏ சங்க மாவட்ட செயலாளர் நீலகண்டன், தலைவர் ஜான், எஸ்.சி, எஸ்.டி நல சங்க மாவட்ட தலை வர் செந்தில், ஓய்வூதியர் சங்க தலைவர் ஜெய ராமன், இணை செயலாளர் மணிவேல் ஆகி யோர் பேசினர்.