திருச்சிராப்பள்ளி, அக்.29 - ஒன்றிய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை உருவாக்கி அதனை நாடு முழுதும் அமல்படுத்த உத்தரவிட்டது. இதையொட்டி தமிழகத்தில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தப் பட்டு வருகிறது. இதன்படி இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் பயணித்தால் ரூ.1000 அபராதமும், பின்னால் அமர்ந்து இருப்பவரும் ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.1000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்சூரன்ஸ், லைசன்ஸ் இல்லாதவர்களுக்கு ரூ.5000, அதிகம் பாரம் ஏற்றும் வண்டிகளுக்கு ரூ.25,000 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தை தமிழக அரசு அம லாக்க கூடாது. அபராத உயர்வை திரும்ப பெற வேண்டும். சிறிய வாகன உரிமையாளர்களை ஒழித்துக் கட்டும் நோக்கத்துடனும் கார்ப்பரேட் கம்பெனி களுக்கு வழிவகுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். குண்டும் குழியுமாக இருக்கக்கூடிய சாலைகளை உடனே சரி செய்ய வேண்டும். திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைத்த தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலி பர் சங்க காட்டூர் பகுதி குழு சார்பில் சனிக்கிழமை திருவெறும்பூர் கடைவீதி யில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் லெனின் தலைமை வகித்தார். பகுதிக்குழு நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.