districts

img

ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அப்புறப்படுத்தக் கூடாது: தள்ளுவண்டி, தரைக்கடை வியாபாரிகள் போராட்டம்

திருச்சிராப்பள்ளி,  மே 12- திருச்சியில் தள்ளு வண்டி, தரைக் கடை வியா பாரம் செய்து வருபவர்களை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அப்புறப்படுத்தக் கூடாது என  வலியுறுத்தி திருச்சி மாவட்ட தள்ளுவண்டி, தரைக்கடை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு முற்று கைப் போராட்டம் நடை பெற்றது.  போராட்டத்திற்கு சங்க மாவட்டத் தலைவர் கணே சன் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்டச் செயலா ளர் ரெங்கராஜன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், மத்திய பேருந்து நிலைய கிளைச் செயலாளர் ஷேக் அப்துல்லா, வ.உ.சி ரோடு கிளைச் செயலாளர் அப் துல்லா, என்.எஸ்.பி.ரோடு கிளை செயலாளர் கோபால், சத்திரம் பேருந்து நிலைய கிளை செயலாளர் ராமச் சந்திரன் உள்பட நூற்றுக் கணக்கான வியாபாரிகள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். போராட்டத்தில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக திருச்சியில் தள்ளுவண்டி, தரைக் கடை வியாபாரம் செய்து வருபவர்களை ஆக் கிரமிப்பு என்ற பெயரில் அப்புறப்படுத்தக் கூடாது. 2014-ம் ஆண்டு உச்ச நீதி மன்ற தீர்ப்புப்படி தரைக் கடை வியாபாரிகள் பாது காப்பு சட்டத்தை மீறக் கூடாது. பல ஆண்டு காலமாக தரைக் கடை நடத்துபவர்க ளுக்கு அடையாள அட்டை யை புதுப்பித்து உடனடியாக வழங்கிட வேண்டும். மேலும் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாது காக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. பின்னர், இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். மேலும் மாநகராட்சி மேயர் அன்பழ கனை சந்தித்தும் முறை யிட்டனர்.

;