ஒட்டன்சத்திரம், மார்ச் 31- திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தத்திற்கு ஆதரவாக திமுக நிர்வாகிகள் தீவிர மாக வாக்குச் சேகரித்து வருகின்றனர். உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சரும், திமுக திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளருமான அர.சக்கரபாணி, ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து பிரிவு தி.மு.க. நிர்வாகிகளும் தினந்தோறும் பொது மக்களை சந்தித்து திமுக ஆட்சியின் சாதனைகள் மற்றும் மக்களவை தேர்தல் வாக்குறுதி ஆகியவற்றை எடுத்துக்கூறியும், ஒவ்வொரு ஊரிலும் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத்திட்டப் பணிகளை பட்டியலிட்டும் சுட்டிக் காட்டி அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க வேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளார். இதனையடுத்து ஒட்டன்சத்திரம் ஒன்றியச் செயலாளர்கள் ஜோதிஸ்வரன், தர்மராஜன், தொப்பம்பட்டி ஒன்றியச் செயலாளர்கள் தங்கராஜ், சுப்பிரமணி யன், ஒட்டன்சத்திரம் நகர வெள்ளைச்சாமி ஆகியோர் தலைமையில் அந்த அந்த பகுதியில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள், மகளிர் அணியினர், அனைத்து பிரிவு நிர்வாகிகள் மற்றும் சிபிஎம் கிளை நிர்வாகிகளுடன் திண்டுக்கல் மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் ஆதரவாக அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு தீவிரமாக வாக்குச் சேகரித்து வருகின்றனர்.