districts

img

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு நாகை மாவட்டச் செயலாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு நாகை மாவட்டச் செயலாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினருமான எம்.கலைச்செல்வன் இல்ல திருமண வரவேற்பு விழா மயிலாடுதுறையில் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் ப.மாரியப்பன் வரவேற்றார். அருண் - பிரியலெஷ்மி-யின் மணவிழா வரவேற்பை கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உரையாற்றினார்.  வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் மற்றும் சிபிஎம், சிஐடியு தலைவர்கள் மணமக்களை வாழ்த்தினர். இதில், சிஐடியு நடத்தும் நிர்மல் பள்ளிக்கு எம்.கலைச்செல்வன் குடும்பத்தினர் 5 ஆயிரம் ரூபாயை நிதியுதவியாக வழங்கினார்.