பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற கரூர் மாவட்ட அளவிலான குழு மற்றும் தனிநபர் விளையாட்டு போட்டிகளில் கரூர் பரணி பார்க் பள்ளி மாணவ, மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர். போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியர்களை பரணி பார்க் கல்விக் குழும தாளாளர் எஸ்.மோகனரெங்கன், செயலர் பத்மாவதி மோகனரெங்கன், அறங்காவலர் எம்.சுபாஷினி, பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர் சி.ராமசுப்ரமணியன் ஆகியோர் பாராட்டினர்.