திருச்சிராப்பள்ளி கலையரங்கில் சனிக்கிழமை மாவட்ட நிர்வாகம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து மண்டல அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தினர். இம்முகாமில் தேர்வு செய்யப்பட்ட வேலை நாடுநர்களுக்கு அரசு செயலாளர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சி.ஜி. தாமஸ்வைத்தியன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் எம்.லஷ்மி, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஆகியோர் முன்னிலையில் தேர்வு செய்த நிறுவனத்தின் நிர்வாகிகள் பணி நியமன ஆணைகளை வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.