புதுக்கோட்டை, டிச.11 - சுதந்திரப் போராட்ட வீரர், தகைசால் தமிழர் என்.சங்கரய்யாவின் நினைவைப் போற்றும் வகையில் புதுக்கோட்டை மாட்சிமை தாங்கிய மன்னர் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் 103 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இந்திய மாணவர் சங்க புதுக்கோட்டை நகரச் செயலாளர் மகாலெட்சுமி தலைமை யில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கவிச்சுடர் கவிதைப்பித்தன், கல்லூரி முதல்வர் புவ னேஸ்வரி ஆகியோர் மாணவர்களுக்கு மரக் கன்றுகளை வழங்கியும், கல்லூரி வளாகத் தில் மரக்கன்றுகளை நடவு செய்தும் சிறப் பித்தனர்.