திருச்சிராப்பள்ளி, ஜூன் 6 - தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் திருச்சி பால்பண்ணை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வணிகர் சங்கங்களின் பேர மைப்பு 39-வது மாநாடு வெற்றி பெற்றதற்கான விழா நடைபெற்றது. மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தலைமை வகித்தார். மாநில செயலாளர் கோவிந்தராஜூலு, மாநில பொருளாளர் சதக்கத்துல்லா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அதனைத் தொடர்ந்து மாநிலத் தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி யில் கூறியதாவது: “மே 5 ஆம் தேதி மாநாட்டில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள் கிறேன். பிளாஸ்டிக் பிரச்சனை மீண்டும் தலையெ டுக்க ஆரம்பித்துள்ளது. ஒருமுறை பயன்படுத்தும் பிளா ஸ்டிக் என்பது மிகப்பெரிய நிறுவனங்களால் தயாரிக்கப் படுவது. அதனை முதலில் தடை செய்ய வேண்டும். உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்துவதில் தவ றில்லை. ஆனால் அந்த ஆய்வை எங்கு நடத்த வேண்டும் என்று தெரிந்து நடத்தலாம். விற்பனையாளர்களிடம் ஆய்வு நடத்துவதைவிட உற்பத்தி செய்யும் இடத்தில் நடத்தினால் நல்லது. விபத்து காப்பீட்டு திட்டத்தை அதிகப்படுத்தியது வரவேற் கத்தக்கது. திருச்சி பால் பண்ணையில் இருந்து துவாக் குடி வரை பறக்கும் சாலை திட்டம் கொண்டு வர முடிவு செய்திருப்பது போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் ஒரு நல்ல திட்டமாக அமைகிறது”.