districts

திருச்சி முக்கிய செய்திகள்

நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு

தஞ்சாவூர், டிச.16 -  சென்னையில் புயல்  வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு, தஞ்சா வூர் மாவட்டம், பேராவூ ரணி கோகனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பாக மண்டல ஒருங்கிணைப்பாளர் எஸ். பாண்டியராஜன் ஏற்பாட் டில் ரூ.85 ஆயிரம் மதிப் புள்ள, தலா 200 எண்ணிக் கையிலான போர்வை, சேலை, கைலி ஆகிய நிவா ரணப் பொருள்கள் பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் சாச னத் தலைவர் எம்.நீல கண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கண்புரை பரிந்துரை முகாம்

பாபநாசம், டிச.16 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டார ஆரம்ப  சுகாதார நிலையங்கள் மற்றும் மாவட்ட பார்வை  இழப்பு தடுப்பு சங்கம்  இணைந்து இலவச கண்புரை பரிந்துரை முகாமை நடத்தின. கபிஸ் தலம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த முகா மிற்கு வட்டார மருத்துவ அலுவலர் தீபக் தலைமை வகித்தார். கண் மருத்துவ உதவியாளர் ரங்கராஜ் கண் பரிசோதனை மேற் கொண்டார். இதில் கண் புரை முற்றிய நிலையில் இருந்த 19 பேர் அறுவை சிகிச்சைக்காக தஞ்சாவூர் மண்டல கண் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருமானூரில் மின் சிக்கன வார விழா

அரியலூர், டிச.16 - மின் சிக்கன வார விழா வையொட்டி அரியலூர் மாவட்டம் திருமானூர் மின் சார வாரிய உப கோட்டத் தில் சனிக்கிழமை விழிப் புணர்வு பேரணி நடை பெற்றது. திருமானூர் பேருந்து நிலையத்தில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணிக்கு, மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் விஜய குமார் தலைமை வகித்தார்.  ஊராட்சி மன்றத் தலைவர் உத்திராபதி, துணைத் தலைவர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியை, ஒன்றிய குழுத் தலைவர் சுமதி அசோகசக்கரவர்த்தி கொடியசைத்து தொடக்கி வைத்து, பொதுமக்களிடம் மின் சிக்கனம் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார். பேரணி அரியலூர் மெயின்ரோடு, கடைவீதி வழியாக சென்று திருமா னூர் ஊராட்சி ஒன்றிய அலு வலகத்தில் நிறைவடைந்தது.

எம்.பி.க்கள் சஸ்பெண்ட் சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி, டிச.16 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களை  சஸ்பெண்ட் செய்த உத்தரவை பாஜக மோடி அரசு திரும்பப் பெற  வேண்டும் என வலியுறுத்தி திரு வாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி புதிய பேருந்து நிலையம்  அருகில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தெற்கு ஒன்றியம் மற்றும்  நகரக் குழுக்கள் சார்பில் நடை பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.ஜோதிபாசு, கேஜி.ரகுராமன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் டி. சுப்பிரமணியன், எஸ்.சாமிநாதன், கேபி.ஜோதிபாசு, ஏ.பிரகாஷ், வாலிபர் சங்கம் மாவட்டச் செய லாளர் ஏ.கே.வேலவன், ஒன்றியச் செயலாளர் டிவி.காரல்மார்க்ஸ், நகரச் செயலாளர் கே.கோபு, நகர் மன்ற துணைத் தலைவர் ஜெய பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தகவல் தெரிவிக்காமல் ஜேசிபி இயந்திரம் ஏலம்  விவசாயிக்கு ரூ.5.10 லட்சம் வழங்க தனியார் நிதி நிறுவனத்திற்கு உத்தரவு

அரியலூர், டிச.16- அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே எவ்வித தகவலும் தெரிவிக்காமல் ஜேசிபி இயந்திரத்தை ஏலம் விட்டு நடவ டிக்கை மேற்கொண்ட தனியார் நிதி நிறு வனம், விவசாயிக்கு நஷ்ட ஈடு மற்றும்  வழக்கு செலவுத் தொகை ரூ.5.10 லட்சம் வழங்க வேண்டும் என்று அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. செந்துறை அருகேயுள்ள குமிழியம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி வேம்பு. இவர் கடந்த 2020-இல் அரியலூரிலுள்ள சோழமண்டலம் நிதி நிறுவனத்தின் மூலம் ரூ.22.65 லட்சம் கடன் பெற்று, ஜேசிபி இயந்திரத்தை வாங்கினார். இந்த கடனை ரூ.60,204 வீதம் 48 தவணைகளில் திருப்பி செலுத்த  வேண்டும் என்பது ஒப்பந்தம். அதன்படி அவர், மாதம் மாதம் தவணைத் தொ கையை செலுத்தி வந்தார். கடந்த 2021 மே மாதம் கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு இருந்த தால் தவணைத் தொகையை அவர் செலுத்தவில்லை. அதன் பிறகு 2022 செப் டம்பர் வரை 20 தவணைகள் செலுத்தி யுள்ளார். ஆனாலும், கடந்த 18.10.2022 அன்று ஜேசிபி இயந்திரத்தை சோழ மண்டலம் நிதி நிறுவனம் பறிமுதல் செய்து,  மீதிக் கடன் தொகையான ரூ.16,78, 939-ஐ ஒரே தவணையாக 5.12.2022 அன்றுக்குள் செலுத்திவிட்டு, இயந்திரத்தை  ஓட்டிச் செல்லலாம் எனக் கூறியுள்ளது.  அதன்படி வேம்பு கடந்த 4.12.2022 அன்று மீதித் தொகையை செலுத்தச் சென்ற போது, வாகனத்தை முன்பே ஏலம்  விட்டதாக அந்த நிதிநிறுவனம் கூறி யதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து வேம்பு, அரியலூர் மாவட்ட  நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், சோழமண்டலம் நிதி நிறுவனம் மீது கடந்த 21.3.2023 அன்று வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்து வந்த நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் தமிழ்ச்செல்வி மற்றும் உறுப்பினர்கள் பாலு, லாவண்யா ஆகியோர் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. தீர்ப்பில், “சோழமண்டலம் நிதி நிறு வனம் ஒப்பந்தப்படி ஜேசிபி வாகனத்தை நல்ல நிலையில் வேம்புவிடம் திருப்பி ஒப்ப டைத்து விட்டு, மீதமுள்ள 26 தவணை களை முறைப்படி 26 மாதங்களில் பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு  வண்டியை ஒப்படைக்கத் தவறும் பட்சத்தில்  ரூ.17,02,466-ஐ ஒன்பது சதவீத வட்டி யுடன் திருப்பி செலுத்த வேண்டும். மேலும்  நஷ்டஈடாக ரூ.5 லட்சமும், வழக்கு செலவுத் தொகையாக ரூ.10,000-மும் ஒரு மாதத்துக்குள் செலுத்த வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

பாலின பாகுபாட்டிற்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம்

அரியலூர், டிச.16 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பாலின பாகு பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஜெயங் கொண்டம் வட்டார இயக்க மேலாண்மை  அலகு சார்பில், பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம், ஊர்வலம் மற்றும் உறுதிமொழி நிகழ்ச்சி ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி  அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய மேலாளர் தாமோதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு ஊர்வலம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் தொடங்கி முக்கிய வீதிகளின் வழியாக மீண்டும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அடைந்தது. தொடர்ந்து நாடகம், பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம்  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலின பிரச்ச னைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அரசு ஊழியர்கள் வீட்டில்  31 பவுன் நகை கொள்ளை

தஞ்சாவூர், டிச.16 -  ஒரே நாளில் ஆசிரியை, தபால் ஊழியர் வீடுகளின் கதவை உடைத்து நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி.காலனி கே.எம்.ஏ உடையார் நகரைச் சேர்ந்தவர் மகேஸ்வரி (46).  இவர் பொய்யுண்டார்கோட்டையில் அரசு பள்ளியில்  ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். வெள்ளிக்கிழமை  மகேஸ்வரி வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்றார். மாலையில் வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே பீரோவை உடைத்து 19 பவுன் தங்க நகை களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. தபால் ஊழியர் வீடு இதேபோல் தஞ்சாவூர் விளார்ரோடு நியூ பாத்திமா நகரை சேர்ந்தவர் சுமதி (46). இவர் தஞ்சாவூர் மன்னர்  சரபோஜி அரசு கல்லூரி வளாகத்தில் உள்ள தபால் நிலை யத்தில் தற்காலிக ஊழியராக வேலைபார்த்து வரு கிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு வெள்ளிக்கிழமை வேலைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பீரோவை உடைத்து 12 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இந்த இரண்டு திருட்டு சம்பவங்கள் குறித்தும் மகேஸ்வரி, கோமதி ஆகியோர் தனித் தனியாக அளித்த  புகாரின் பேரில், தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் தாலுகா  காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

நிதி நிறுவன மோசடி வழக்கில்  திருச்சியைச் சேர்ந்த பங்குதாரர் கைது

தஞ்சாவூர், டிச.16-  நிதி நிறுவன மோசடி வழக்கில் திருச்சியைச் சேர்ந்த  பங்குதாரரை தஞ்சாவூர் பொருளாதார குற்றப்பிரிவு காவ‌ல்துறை‌யின‌ர் சனிக்கிழமை கைது செய்தனர். திருச்சியை தலைமையிடமாக கொண்ட சங்கமம் பெனிபிட் பண்ட் என்ற நிதி நிறுவனம், தஞ்சாவூர், கும்ப கோணம், நாமக்கல் ஆகிய இடங்களில் கிளைகளை திறந்து முதலீட்டாளர்களிடமிருந்து நிதியை பெற்றது. இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த முத லீட்டாளர்கள் 20 பேர், ரூ.1.89 கோடியை முதலீடாகப் பெற்று ஏமாற்றியதாக நிறுவனத்தின் பங்குதாரர்கள் மீது  கடந்த 2019 ஆம் ஆண்டு புகார் செய்தனர். இந்த வழக்கு, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மேற்கு காவல்  நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு, பின்னர் தஞ்சாவூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. வழக்கில் பங்குதாரர்கள் பார்த்திபன், சுகந்தா தேவி, ராஜேஷ், ராமதாஸ், சரவணன், ராஜேஸ்வரி ஆகி யோர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், சனிக்கிழமை நிதி நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒரு வரான திருச்சி காட்டூர் அம்மன் நகரைச் சேர்ந்த ரா. தண்ணீர்மலை (26) என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு  காவல்துறையினர் கைது செய்தனர். அவரை மதுரை யில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில்  அடைத்தனர்.

சர்க்கரை நோயாளிகளுக்கு பாத பாதிப்பு கண்டறிதல் முகாம் 

தஞ்சாவூர், டிச.16 -  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள  செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை மற்றும் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து, சர்க்கரை நோயா ளிகளுக்கான பாத பாதிப்பு கண்டறிதல் முகாம் நடை பெற்றது.  இம்மருத்துவ முகாமை பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து துவக்கி  வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர்கள் அருள் (பேராவூரணி), ராமலிங்கம் (சேதுபாவாசத்திரம்) முன்னிலை  வகித்தனர்.  தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,  சிறப்பு மருத்துவர்கள் ரத்தநாள அறுவை சிகிச்சைத் துறை  எஸ்.மருதுதுரை, பொது அறுவை சி‌கி‌ச்சைத் துறை  எம்.செந்தில்குமரன், ஒட்டுறுப்பு சிகிச்சைத் துறை சஞ்சீவி, கண் சிகிச்சைத்துறை காமேஸ்வரி ஆகியோர்  அடங்கிய மருத்துவக் குழுவினர், சர்க்கரை நோயாளி களின் பாதங்களை பரிசோதித்து மருத்துவ ஆலோசனை வழங்கினர். மேல் சிகிச்சைக்காக தஞ்சைக்கு 59 நோயா ளிகள் பரிந்துரை செய்யப்பட்டனர். 

9 சட்டமன்றத் தொகுதிகளுக்கு  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

திருச்சிராப்பள்ளி, டிச.16 - ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளுக்கு மின்னணு  வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. திருச்சிராப்பள்ளி பழைய மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்  வைப்பறை சனிக்கிழமை காலை 9 மணியளவில் மாவட்ட  தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியரால் அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சியினரின் பிரதிநிதிகள் முன்னிலை யில் திறக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் முதல்நிலை சரிபார்ப்பு பணி  முடிக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், 9 சட்டமன்றத்  தொகுதிக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்களின் பாதுகாப்பு டன் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் மாவட்டத்திலுள்ள 9 சட்டமன்றத் தொகுதி களிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்ப டுத்திட அனைத்து தேர்தல் அலுவலர்களுக்கும் அறிவுறுத் தப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்  மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்தார்.

கபாடி வீரர்களுக்கு இலவச கோடைகால பயிற்சி

மயிலாடுதுறை, டிச.16 - மயிலாடுதுறையில் கபாடி வீரர்களுக்கு கோடை கால இலவச சிறப்பு பயிற்சி வழங்க முடிவெடுக்கப் பட்டுள்ளது.  மயிலாடுதுறை தியாகி ஜி.நாராயணசாமி நக ராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அமெச்சூர் கபாடி கழக ஆலோசனைக் கூட்டம் வெள்ளியன்று நடைபெற் றது. மாவட்ட அமெச்சூர் கபாடி கழகத் தலைவர் மா. ரஜினி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தில் இளம் கபாடி வீரர், வீராங்கனைகளை கண்டறிந்து அவர் களுக்கு இலவசமாக கோடைகால சிறப்பு பயிற்சி அளித்து, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க  தயார் செய்வது. கபாடி வீரர்களுக்கு வேலைவாய்ப்பை  உருவாக்கித் தருவது. பள்ளி, கல்லூரி மாணவ-மாண விகளை தேர்வு செய்து லீக் மேட்ச் நடத்துவது. மாவட்ட  அளவில் அனைத்து வயது பிரிவினருக்கான கபாடி ஓபன் போட்டிகளுக்கு 16 அணிகளை தேர்வு செய்து விளையாட வைப்பது. சிறந்த 100 விளையாட்டு வீரர்களுக்கு  விபத்துக் காப்பீடு ஏற்படுத்தி தருவது என முடிவெடுக் கப்பட்டது.

புதுக்கோட்டையில் தமிழ்க்  கல்லூரி துவங்க கோரிக்கை

புதுக்கோட்டை, டிச.16 - புதுக்கோட்டையில் தமிழ்க் கல்லூரி ஒன்றைத் தொடங்க வேண்டுமென புதுக்கோட்டை தமிழ்ச் சங்கம் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. புதுக்கோட்டை தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகக் குழு கூட்டம் தலைவர் தங்கம்மூர்த்தி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கத்தின் ஆலோசகர்கள் முனைவர் ஆர்.ராஜ்குமார், வழக்கறிஞர் செந்தில்குமார், துணைத் தலைவர் முருகபாரதி உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். முன்னதாக செயலாளர் மகாசுந்தர் வரவேற்க, பொருளாளர் கருப்பையா நன்றி கூறினார்.   கூட்டத்தில், சிறந்த தமிழ் அறிஞர்களுக்கு “வாழ்நாள் தமிழ்த் தொண்டர் விருது“ வழங்குவது, புதுக்கோட்டையில் தமிழ்க் கல்லூரி ஒன்றை தொடங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். பொங்கல் திருநாளை முன்னிட்டு “தமிழர் மரபுவிழா“ கொண்டாடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.