திருப்பூர் அருகே அவிநாசிலிங்கம்பாளையத்தில் இளம் கம்யூனிஸ்டுகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது. வெள்ளியங்காடு பகுதி மார்க்சிஸ்ட் கட்சி கிளைகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு கிளைச் செயலாளர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். இதில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் இரா.சிந்தன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செ.மணிகண்டன் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்ற இளந்தோழர்களுடன் சமகால அரசியல், பண்பாட்டு நிகழ்வுகள் குறித்து கலந்துரையாடினர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.உண்ணிகிருஷ்ணன் வாழ்த்திப் பேசினார். இதில் தெற்கு மாநகரக்குழு உறுப்பினர் கே.பொம்முதுரை உட்பட கட்சி அணியினர் கலந்து கொண்டனர்.