districts

img

கொள்ளிடம் ஆற்றில் சாமி சிலை கண்டெடுப்பு

பாபநாசம், பிப்.22- தஞ்சாவூர் மாவட்டம், அய்யம் பேட்டை அருகே கோவிந்தநாட்டுச் சேரி ஊராட்சி, பட்டுக்குடி  கொள்ளிடம் ஆற்றில் 4 அடி உயர  தட்சிணாமூர்த்தி கருங்கல் சிலை கிடந்தது. இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர் ஜெய் சங்கர் வருவாய்த் துறைக்கு  தகவல் தெரிவித்தார்.   பாபநாசம் வட்டாட்சியர் (பொறுப்பு) முருககுமார், துணை வட்டாட்சியர் பிரபு, வருவாய் ஆய்வாளர் ராஜ தேவி, கிராம நிர்வாக அலுவலர் பாலாஜி, கபிஸ்தலம் போலீசார் கொள்ளிடம் ஆற்றுக்கு விரைந்து சென்று  தட்சிணாமூர்த்தி சிலையை பார்வையிட்டனர். பின்னர் வருவாய்த்துறையினர் கொள்ளிடம் ஆற்றில் இருந்து சிலையை பொக்லைன் மூலம் தூக்கி, வேனில் ஏற்றி, பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.