districts

img

திருக்கடையூரில் மாடு, குதிரை ரேக்ளா பந்தயம் ஆயிரக்கணக்கான மேற்பட்ட மக்கள் கண்டுகளிப்பு

மயிலாடுதுறை, ஜன.17 -  மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூ ரில் 45 ஆவது ஆண்டாக மாடு, குதிரை  ரேக்ளா பந்தயம் வியாழனன்று நடைபெற்றது.  இப்போட்டிக்கு திருக்கடையூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெய மாலதி சிவராஜ் தலைமை வகித்தார். செம்ப னார்கோவில் முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், தரங்கம்பாடி பேரூ ராட்சி தலைவர் சுகுணா சங்கரி குமரவேல், டி.மணல்மேடு ஊராட்சி மன்றத் தலைவர் திலகவதி துரைராஜன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.  முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு  உறுப்பினர் சிம்சன் வரவேற்று பேசினார். பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா முருகன் ரேக்ளா பந்த யத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  தொடர்ந்து திருக்கடையூர் தில்லையாடி நுழைவு வாயில் அருகிலிருந்து துவங்கி அனந்தமங்கலம் மற்றும் தரங்கம்பாடி வரை பந்தயம் நடந்தது.  போட்டியில் சின்னமாடு, நடுமாடு, பெரிய  மாடு, கரிச்சான் குதிரை, நடுக்குதிரை, பெரிய குதிரை ஆகிய மாடுகள் மற்றும்  குதிரைகள் பந்தயத்திற்கு அனுமதிக்கப் பட்டு பின்னர் அவை ஆறு வகைகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன.  முதல் பரிசு சின்னமாட்டிற்கு ரூ.9 ஆயிரம்,  நடுமாட்டிற்கு ரூ.11 ஆயிரம், பெரிய மாட்டிற்கு ரூ.13 ஆயிரம், கரிச்சான் குதிரைக்கு ரூ.16 ஆயிரம், நடுக்குதிரைக்கு ரூ.20 ஆயிரம், பெரிய குதிரைக்கு ரூ.22 ஆயிரம் மற்றும் கேடயத்தை மாடு, குதிரை  உரிமையாளர்களுக்கு பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை திருக்கடை யூர், டி.மணல்மேடு, பிள்ளைபெருமாள் நல்லூர், கிள்ளியூர், தில்லையாடி, காழி யப்பநல்லூர், மாணிக்கபங்கு ஆகிய ஏழு  முன்னாள் ஊராட்சி தலைவர்கள் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர், பொது மக்கள் செய்திருந்தனர்.  உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டினர் போட்டியை கண்டு களித்தனர். மயிலாடுதுறை மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் ஸ்டாலின், தலைமையில் 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.