districts

img

மாத உதவித்தொகையை உயர்த்தித் தரக் கோரி மாற்றுத்திறனாளிகள் சிறை நிரப்பும் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜன.21 - மாத உதவித்தொகையை உயர்த்தித் தரக் கோரி மாற்றுத் திறனாளிகள் சிறை நிரப்பும் போ ராட்டத்தில் ஈடுபட்டனர். ஆந்திர மாநிலத்தைப் போல குறைபாட்டின் தன்மைக்கு ஏற்ப ரூ.6  ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரம் என்ற அளவில் உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். விண்ணப்பித்து காத்தி ருக்கும் அனைவருக்கும் உடனடி யாக உதவித்தொகையை வழங்க வேண்டும். மகாத்மா காந்தி வேலை உறுதித்திட்டத்தில் 4 மணி  நேரம் பணியில் இருந்தால் போதும்  என்ற பழைய நிலையே தொடர வேண்டும். 8 மணி நேரம் பணித் தளத்தில் இருக்க வேண்டும் என்ற  புதிய உத்தரவை திரும்பப் பெற வேண்டும். உதவித் தொகை மற்றும் சான்றி தழ்களை மாவட்ட மாற்றுத் திற னாளிகள் நல அலுவலகத்திலேயே பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும்  பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை மாநிலம் தழுவிய அளவில் மறியல்  மற்றும் சிறை நிரப்பும் போராட்டத் தில் ஈடுபட்டனர். திருச்சிராப்பள்ளி சங்கத்தின் திருச்சி மாநகர், புற நகர் மாவட்டக் குழுக்கள் சார்பில் செவ்வாயன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சிறை நிரப்பும் போராட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்கு மாநகர் மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன், மாநகர் மாவட்டச் செயலாளர் அந்தோணி சேகர், புறநகர் மாவட்டச் செயலாளர் ரஜினிகாந்த் ஆகியோர் தலைமை வகித்தனர். போராட்டத்தை மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் ஜெயபால் துவக்கி வைத்தார்.  தொட்டியம் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க நிர்வாகி கள் நமச்சிவாயம், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி சங்க மாவட்டத் தலைவர் ரவி, முன்னாள் பொருளாளர் சுப்பிரமணியன், விவ சாயத் தொழிலாளர்கள் சங்க ராம நாதன், ஒன்றியச் செயலாளர் முரு கேசன், முருகன் ஆகியோர் பேசி னர்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.தங்கவேலு தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே. சண்முகம், மாவட்டச் செயலாளர் எம்.கணேசன், நகரச் செயலாளர் வி.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாவட்டக்  குழு உறுப்பினர்கள், புதுக் கோட்டை நகரப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.  மணமேல்குடி தாலுகா அலு வலக முன்பு நடந்த போராட்டத்திற்கு மாற்றுத்திறனாளி சங்க ஒன்றியத் தலைவர் நாராயணசாமி தலைமை வகித்தார். செயலாளர் சுரேஷ், பொருளாளர் ஆரோக்கியசுந்தரம், ஒன்றிய துணைத் தலைவர் அப்துல்  காதர் ஆகியோர் முன்னிலை வகித்த னர். சிஐடியு ஒன்றிய ஒருங்கிணைப் பாளர் கரு.இராமநாதன் போராட் டத்தை துவக்கி வைத்து பேசினார்.  தஞ்சாவூர் தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் மாநக ரச் செயலாளர் சி.ராஜன் தலைமை  வகித்தார். ஒன்றியச் செயலாளர் ஏ. சாமியப்பன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி.எம். இளங் கோவன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். பேராவூரணி மற்றும் சேது பாவாசத்திரம் ஒன்றியம் சார்பில், பூக்கொல்லையில் உள்ள சேது பாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு  நடைபெற்ற போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ஏ. மேனகா, சேதுபாவாசத்திரம் ஒன்றிய  தலைவர் எஸ்.ஜே.ராஜேஷ் கண்ணா ஆகியோர் தலைமை வகித்தனர். வி.தொ.ச ஒன்றிய நிர்வாகி வீ.கருப்பையா, தென்னை விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி ஆதரித்து பேசினர்.

ஒரத்தநாட்டில் ஒன்றியச் செய லாளர் மதியழகன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், மாவட்டத் தலைவர் டி.கஸ்தூரி கோரிக்கை விளக்க உரையாற்றி னார். ஒன்றியத் தலைவர் எம்.தங்கப்பன், ஒன்றிய பொருளாளர் எஸ்.வி.கவிதா, ஒன்றிய துணைச் செயலாளர் சிவக்குமார் உள்ளிட் டோர் பங்கேற்றனர். திருவோணம்  ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் கோவி.ராதிகா தலைமை வகித்தார். ஒன்றி யத் தலைவர் ஏ.தில்லையம்மாள், ஒன்றியப் பொருளாளர் துரை ராஜன், தனசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பட்டுக்கோட்டை, மதுக்கூர் ஒன்றியங்களின் சார்பில் பட்டுக் கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவல கம் முன்பு மதுக்கூர் ஒன்றியச் செய லாளர் சி.ஏ.சந்திரபிரகாஷ், பட்டுக் கோட்டை ஒன்றிய பொறுப்பாளர் மணிகண்டன், மதுக்கூர் ஒன்றியத் தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகி யோர் தலைமை வகித்தார். பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த போராட் டத்திற்கு பிரஹலாதன், நாகராஜன் தலைமை வகித்தனர். இதில் 100  பேருக்கு மேல் பங்கேற்று, கோரிக் கைகளை வலியுறுத்தி முழக்கங் களை எழுப்பினர். கும்பகோணம் ஊராட்சி ஒன்றி யம் அலுவலகம் முன்பு மாநகர தலைவர் பாரூக் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட  துணைத் தலைவர் பழ.அன்புமணி, மாவட்ட இணைச் செயலாளர் சரவணன், ஒன்றியச் செயலாளர் தாமோதரன், ஒன்றிய பொருளாளர் மகேஸ்வரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகேயுள்ள ஆக்கூர் முக்கூட்டில் நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர்கள் செல்வராஜ் (தரங்கம்பாடி), விஜயரெங்கன் (செம்பனார்கோவில்) ஆகியோர் தலைமை வகித்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் செம்பனார்கோவில் ஒன்றி யச் செயலாளர் கே.பி.மார்க்ஸ், கண்ணகி, வீ.எம்.சரவணன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். இந்தப் போராட்டங்களில் பங்கேற்ற பலரை காவல்துறை யினர் கைது செய்தனர்.