திருச்சிராப்பள்ளி, மே 24 -
திருச்சி துறையூர் பேருந்து நிலையத்தை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் துறையூர் ஒன்றிய குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தினமும் காவிரி குடிநீர் வழங்க வேண்டும். தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும். மலையப்பன் சாலை, கலப்பு காலனி, விநாயகர் தெரு பகுதிகளில் பெண்களுக்கு கழிவறை வசதி செய்து தர வேண்டும். துறையூர் நகரம் முழுவதும் சாக்கடையை சுத்தம் செய்து, கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப் பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்கிலிதுரை தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சியின் ஒன்றியச் செயலா ளர் ஆனந்தன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவராஜன், ஒன்றிய குழு உறுப்பினர் கணேசன் ஆகியோர் பேசின