புதுக்கோட்டை, டிச.30- புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டாரப் பகு திகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் செவ்வாயன்று தொடங்கி வைத்தார். கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளாளவிடுதி ஊராட்சி, வலச்சேரிபட்டியில் ரூ.7.40 லட்சம் மதிப்பில் கட்டப் பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும், வெள்ளாளவிடுதி ஊராட்சி, தமிழ்நாடு அரசு எண்ணெய்வித்து பண்ணையில் 2,000 பனை விதைகள் நடும் பணியினையும் மற்றும் வெள் ளாளவிடுதி உயர்நிலைப்பள்ளி யில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாமினையும் துவக்கி வைத்து, பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கந்தர்வக் கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நிலமெடுப்பு) ஜானகி, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, வேளாண் இணை இயக்குநர் இராம.சிவக்குமார், ஒன்றியக் குழுத் தலைவர் கார்த்திக், ஊராட்சிமன்றத் தலைவர் எம்.பரமசிவம் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.