districts

பட்டியலின மக்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

கரூர், ஜூன் 10-

      கரூர், வீரணம்பட்டியில் உள்ள பட்டியலின மக்களை கோவிலுக்குள் அனுமதிக்காததைக் கண்டித் தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பும் தீண் டாமை வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் மீது வன்கொ டுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது  செய்யக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

    இதுதொடர்பாக கட்சியின் மாவட்டச் செயலாளர் மா. ஜோதிபாசு விடுத்துள்ள அறிக்கையில், ‘‘கரூர் மாவட்டம், கடவூர் அருகே உள்ள வீரணம்பட்டி கிராமத் தில் உள்ள காளியம்மன் கோவில் கடந்த புதன்கிழமை  திருவிழா நடைபெற்றது. விழாவில் பட்டியலினத்தை சேர்ந்த ஒருவர் கோவிலுக்குள் வழிபட சென்றபோது, அவரை சாதி ஆதிக்க சக்திகள் தடுத்து நிறுத்தியுள்ள னர்.  

     தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற குளித்தலை  கோட்டாட்சியர் புஷ்பா தேவி இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில், சாதி  ஆதிக்க நபர்கள் பட்டியலினத்தவர்களை கோவிலுக் குள் வழிபட அனுமதிக்க முடியாது என எதிர்ப்பு தெரி வித்தனர். இதனையடுத்து இக்கோவிலுக்கு கோட்டாட் சியர் புஷ்பாதேவி சீல்வைத்தார்.  

    எனவே, கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்த சாதி ஆதிக்க சக்திகள் மீது உடனடியாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, இதற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும். பூட்டிய  கோவிலை உடனடியாக திறந்து பட்டியலின மக்களை  மாவட்ட நிர்வாகம் உரிய பாதுகாப்புடன் கோவிலுக்குள் அழைத்துச் செல்ல வேண்டும்.  

   இப்பகுதியில் மேலும் சாதிய மோதல்கள் ஏற்படா மல், அப்பகுதியில் நிரந்தரமான அமைதியை திரும்ப கொண்டு வருவதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய வழிகாட்டு தலின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனத் தெரி வித்துள்ளார்.