திண்டுக்கல், அக்.15- திண்டுக்கல் மேற்கு மரிய நாதபுரத்தில் உள்ள புனித விண்ணேற்பு மாதா ஆல யத்தில் இஸ்ரேல்-காசா போரை ஐ.நா. சபை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஞாயிறன்று அப்பகுதி மக்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், கடந்த வாரம் இஸ்ரேல், பாலஸ் தீனம் இடையே போர் நடைபெற்று மக்கள் கொல் லப்பட்டு வருகின்றனர். இதனை ஐ.நா. சபை உட னடியாக தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும், போரில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உலக நாடுகள் உறுதி செய்ய வேண்டும் போன்ற கோரிக் கைகள் வலியுறுத்தப் பட்டன. இதில், பங்குத் தந்தை மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.