தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் சத்தியபாமா தலைமை தாங்கினார். கல்வி மாவட்டத் தலைவர் செல்வராஜ் வரவேற்றார், மாவட்டச் செயலாளர் அந்தோணி ராஜ் துவக்க உரையாற்றினார், மாநிலத் தலைவர் மணிமேகலை சிறப்புரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் வேங்கடபதி நன்றி கூறினார்.