திருச்சிராப்பள்ளி, பிப்.14- தமிழ்நாடு மின்வாரியத்தை மூன்றாக பிரிப்பதை கைவிட வேண்டுமென வலியுறுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை மூன்றாக பிரிப் பதை கைவிட வேண்டும். காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களை யும் உடனே நிரப்ப வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும். வாரிசு வேலைக்கு விண்ணப்பித்த வர்களுக்கு உடனே வேலை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் செவ்வா யன்று திருச்சி மாவட்டம் மன்னார்புரத் தில் உள்ள மின் பகிர்மான வட்ட மேற் பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். தமிழ்நாடு மின் பொறியாளர் அமைப்பின் மாநில துணைப் பொதுச் செயலாளர் இருதயராஜ் வாழ்த்தி பேசினார். வட்டத் தலைவர் நட ராஜன் நன்றி கூறினார்.