districts

img

மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை,  மே 8 - மயிலாடுதுறை மாவட் டம் மங்கநல்லூர் அருகே யுள்ள பெரம்பூர் கடைவீதி யில் தமிழ்நாடு விவசாயிகள்  சங்கம் சார்பில் மின்சா ரத்தை தடையின்றி வழங்கக் கோரி புதனன்று ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. பொதுமக்கள் பயன்படுத் தும் மின்சாரம் மற்றும்  விவசாயிகள் பயன்படுத் தும், மும்முனை மின்சா ரத்தை தடையின்றி வழங்கி டக் கோரி சாலை மறியல் போராட்டமாக நடைபெற இருந்தது. இந்நிலையில் முன்ன தாக தரங்கம்பாடி வட்டாட் சியர் மகேஷ் தலைமையில் மின்வாரிய அதிகாரிகள், வருவாய் ஆய்வாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா ளர் எஸ்.துரைராஜ், ஒன்றியச்  செயலாளர் வைரவன் உள்ளிட் டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், கோரிக்கைகளை உடனடி யாக நிறைவேற்றி இரவில் 4  மணி நேரம் தொடர்ச்சியாக வும், பகலில் 6 மணி நேரம்  தொடர்ச்சியாகவும் மும் முனை மின்சாரம் வழங்குவ தாக எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் தற்காலி கமாக  கைவிடப்பட்டு சங்கத் தின் ஒன்றியத் தலைவர் என்.பரமானந்தம் தலைமையில் ஆர்ப்பாட்டமாக நடை பெற்றது. மாவட்டச் செயலா ளர் எஸ்.துரைராஜ், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் சி.விஜ யகாந்த், ஒன்றியச் செயலா ளர் ஜி.வைரவன் மற்றும் சங்க நிர்வாகிகள் உரை யாற்றினர்.