திருப்பூர், பிப்.7- உள்ளாட்சித் துறையில் அவுட் சோர்சிங் முறையை புகுத்தும் அரசா ணை 152 மற்றும் 139 ஐ ரத்து செய்ய வலியுறுத்தி சிஐடியு சார்பில் செவ்வா யன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு போக்குவரத்து கழக மாவட்ட செயலாளர் பி.செல்லதுரை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய மாநில அரசு பணிகளில் அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும். உள் ளாட்சித் துறையில் அவுட்டோர் சிங் முறையை புகுத்தும் அரசாணைகள் 152 மற்றும் 139 ஐ ரத்து செய்ய வேண்டும். போக்குவரத்து, மின்சா ரம், ரயில்வே ஆகிய துறைகளில் ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும். மாநில அரசு சி மற்றும் டி பிரிவுகளில் ஆட்கள் நியமத்தை தடுக்கும் அரசாணை எண் 115 ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநிலச் செயலாளர் கே.சி.கோபிகுமார், சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ரங்க ராஜ், பனியன் சங்க மாவட்ட செயலா ளர் சம்பத், ஆகியோர் கோரிக்கை கள் குறித்து பேசினர். சாலை யோர வியாபாரிகள் சங்கம் மாவட்ட செயலாளர் பி. பாலன், மின்சார துறை ஊழியர்கள் மத்திய அமைப்பு ராம லிங்கம் மற்றும் பாபு, கூட்டுறவு தொழிலாளர் சங்கம் கௌதமன் மற்றும் சுரேஷ், மோட்டார் தொழிற் சங்கம் மாவட்ட செயலாளர் அன்பு உட்பட 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.