districts

img

பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, மே 10 - சட்டமன்றத்தில் தமிழக நிதியமைச்சர் பழைய ஓய்வூதிய திட்டம் சாத்தியமில்லை என்று பேசியதை கண்டித்தும் தேர்தல் வாக்கு றுதிப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என  வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் அரசு அலு வலகங்கள் முன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க திருச்சி  1 வட்டக்கிளை சார்பில் மாவட்ட தலைவர் முனைவர் கா. பால்பாண்டி தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இஎஸ்ஐ மருத்து வமனை முன்பு மாவட்ட துணைத் தலைவர் ஜீவானந்தம் தலைமையிலும், இஎஸ்ஐ மருத்துவமனை தொகுப்பூதிய பணியாளர்கள் மத்தியில் வட்டக்கிளை தலைவர் சுரேஷ் பிரபு தலைமையிலும், மகாத்மா காந்தி நினைவு  அரசு மருத்துவமனையில் அபுதாகிர் தலை மையிலும், மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பட்டு வளர்ச்சித்துறை அலு வலக வளாகம் முன்பு வட்டக்கிளை துணைத் தலைவர் பெருமாள் ராஜ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இணை இயக்குநர் மருத்துவ பணி கள் அலுவலகம் முன் வட்டக்கிளை துணைத்  தலைவர் அருள்பிரகாசம், மாவட்ட துணைத்  தலைவர்  சிவசங்கர் தலைமையிலும், கி.ஆ.பெ.விஸ்வநாதன் மருத்துவக்கல்லூரி முன் ஆய்வக நுட்பனர் சங்க மாவட்ட தலை வர்  ஆனந்த லட்சுமி தலைமையிலும், மாவட்ட  நீதிமன்றம் வளாகத்தில் நீதித்துறை ஊழியர்  சங்க மாவட்ட தலைவர் ரஞ்சித் தலைமையி லும், திருச்சி-2 வட்டக்கிளை சார்பில் முதன்மை கண்காணிப்பு பொறியாளர் நெடுஞ் சாலை துறை அலுவலகம் முன்பு நெடுஞ்சாலை துறை நிர்வாக அலுவலர் சங்க  மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை யிலும், காஜாமலை பல்துறை விளக்க கட்டி டம் முன் மாவட்ட இணை செயலாளர் அமுத வல்லி தலைமையிலும், மன்னார்புரத்தில் மாவட்ட பதிவாளர் கூட்டுறவு அலுவலகம் முன்  மாவட்ட துணைத் தலைவர்  ஜீவானந்தம் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தொழிலாளர் நலத்துறை இணை இயக்கு நர் அலுவலகம் முன்பு சார்நிலை அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் ஜெயசீலன் தலைமையிலும், கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலகம் முன் முத்துராஜ் தலைமையிலும், திருவெறும்பூர் அரசு தொழிற் பயிற்சி பள்ளி வளாகத்தில் வட்டக்கிளை செய லாளர் ராம்ராஜ் தலைமையிலும், திருவெறும் பூர் சார்நிலை கருவூலத்தில் மாவட்ட இணைச் செயலாளர் பாபு தலைமையிலும்,   திருவெறும்பூரில் வட்டக்கிளை செயலாளர் ராம்ராஜ் தலைமையிலும், மணப்பாறை அரசு  மருத்துவமனை மணப்பாறை வட்டக்கிளை செயலாளர் வெங்கடேசன் தலைமையிலும், தொட்டியம் வட்டக்கிளை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வளாகத்தில் மாவட்ட மகளிர் துணைக் குழு அமைப்பாளர் சத்தியவாணி தலைமையிலும், துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வட்டக்கிளை செய லாளர் மணிமாறன், வட்டக்கிளை தலைவர் பெரியசாமி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரியலூர்
அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் குமணன் தலைமை வகித்தார். சங்க மாவட்ட செயலா ளர் வேல்முருகன் கண்டன உரையாற்றினார். இதேபோல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் முருகானந்தம் தலைமை வகித்தார்.

திருவாரூர்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் வெ.சோமசுந்தரம் தலைமையில் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் செ. பிரகாஷ் கோரிக்கைகளை விளக்கிப்பேசினர்.

சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் மற்றும் அங்கன்வாடி ஊழியர் ஓய்வூதியர் சங்கம் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் அவுரி திடலில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்ட தலைவர் எம்.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மரிய.ஜெயராஜ் விளக்க உரையாற்றினார். மாவட்ட பொருளாளர் வி.போஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வேதாரண்யம்
வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட் டத்திற்கு சங்க ஒன்றியத் தலைவர்கள் வேதா ரண்யம் ராமமூர்த்தி, தலைஞாயிறு மூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர்.