districts

img

8 மணிநேர வேலை அரசாணையை அமல்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஆக.28 - எட்டு மணி நேர வேலை அரசா ணையை அமல்படுத்த வேண்டுமென மருந்து மற்றம் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர். குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26, 000 வழங்க வேண்டும். 8 மணி நேர வேலை அரசாணையை அமல்படுத்த வேண்டும். பணி நியமன ஆணை, போனஸ், பி.எப், இ.எஸ்.ஐ, பே சிலிப்  ஆகியவற்றை முறையாக வழங்க வேண்டும். பெண் மருத்துவ பிரதிநிதி களுக்கு பேறுகால விடுப்பை 6 மாத மாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருந்து மற்றும்  விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில்  திங்களன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திருச்சி செங்குளம் காலனியில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சங்க திருச்சி கிளைத் தலைவர் இனியன் தலைமை வகித்தார். கோரிக் கைகளை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்க மாநிலச் செயலா ளர் செல்வராஜ், மாநிலக் குழு உறுப்பி னர் முரளி ஆகியோர் பேசினர். இதில் ஏராளமான மருத்துவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.