districts

img

ரேசன் கடையில் தரமற்ற அரிசி வழங்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை,  டிச.15 - மயிலாடுதுறை மாவட் டம் ஆக்கூரில் உள்ள ரேசன் கடைகளில் புழுக்கூட திண்ண முடியாத புழுத்த அரிசியை தொடர்ந்து வழங்கி  வருவதை கண்டித்து மார்க்சி ஸ்ட் கட்சியின் சார்பில் நியாய விலைக் கடை முன்பு கிளை  செயலாளர் எம்.சுதாமன் தலைமையில் புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செம்பனார்கோவில் ஒன்றிய செயலாளர் கே.பி.மார்க்ஸ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் டி.கண்ணகி, வீ.எம்.சரவணன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் எம்.துரையரசன், எம்.எஸ்.ராஜேந்திரன், ஏ.சபீர் அகமது,  வாலிபர் சங்க ஒன்றிய செய லாளர் அனீஸ் ரகுமான், மாதர்  சங்கம் துர்கா ஆகியோர் கண்டன உரையாற்றினர். சமைத்து சாப்பிட முடி யாத தரமில்லாத அரிசி வழங்குவதை தடுத்து நிறுத்தி விட்டு, நல்ல அரிசியை உடனே வழங்க வேண்டும். எடைக்குறைவாக வழங்கு வதை நிறுத்த வேண்டும்.  அனைத்துப் பகுதி மக்களுக் கும் தட்டுப்பாடின்றி அனைத்து பொருட்களையும் முறையாக வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.  போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த வட்ட வழங்கல் அலுவலர் பாபு,  தரங்கம்பாடி நுகர்பொருள் வாணிபக் கழக உதவி  தர ஆய்வாளர் ராகவன்  உள்ளிட்ட அதிகாரிகள் உடன டியாக நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்தனர்.