விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொரடாச்சேரி ஒன்றிய நிர்வாகி கவியரசன் படுகொலையை கண்டித்து பாபநாசம் மெயின் சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விசிக மாவட்டச் செயலாளர் (பொ) உறவழகன் தலைமை வகித்தார். பாபநாசம் சட்டமன்றத் தொகுதிச் செயலாளர் தமிழன் முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.