மயிலாடுதுறை, மார்ச் 16 - தருமபுரம் ஆதீனத்தை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்ட பாஜக மாவட்டத் தலைவர் அகோரம் உள்ளிட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் கிட்டப்பா அங்காடி அருகில் வெள்ளியன்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஸ்டாலின் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எஸ்.துரைராஜ், ப.மாரியப்பன், ஜி. வெண்ணிலா, டி.சிம்சன், ஏ.ரவிச்சந்திரன், சி. விஜயகாந்த், கே.பி.மார்க்ஸ், மயிலாடு துறை ஒன்றியச் செயலாளர் டி.ஜி.ரவி, நகரச் செயலாளர் துரைக்கண்ணு ஆகியோர் கண்டன உரையாற்றினர். கட்சியின் ஒன்றியச் செயலாளர்கள், மாவட்ட, ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், வாலிபர், மாதர் சங்கத்தினர் பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்தை தொடர்ந்து, வெள்ளியன்று இரவு மும்பையில் பதுங்கியிருந்த பாஜக மாவட்டத் தலைவர் அகோரத்தை தனிப்படை போலீசார் மும்பையில் கைது செய்தனர்.