districts

img

மின்துறையை தனியாருக்கு வழங்கக் கூடாது!

திருச்சிராப்பள்ளி, பிப்.3- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை தனியார் மையத்தின் முதல் கட்டமாக, மூன்று கம்பெனிகளாக பிரித்திட தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளதை கண்டித்தும், உத்தரவை ரத்து  செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு மின்வாரிய  தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் மன்னார்புரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறி யாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநில துணைத்  தலைவர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி டி.பி.ஏ.எஸ் மாநிலத் தலைவர் கண்ணன், இன்ஜினியர் சங்க நரசிம்மன், எம்ளாயிஸ் பெடரேசன் சிவசெல்வம், ஏடிபி அருள், தமிழ்நாடு மின்  ஊழியர் மத்திய அமைப்பு எஸ்.கே.செல்வ ராஜ், சம்மேளனம் பெருமாள் ஆகியோர் பேசினர். டி.பி.ஏ.எஸ் ஞானம் நன்றி கூறி னார். துறையூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித் தார். கூட்டு குழு நிர்வாகிகள் ராமநாதன், சுப்பிரமணி ஆகியோர் பேசினர். பொறி யாளர்கள், தொழிலாளர்கள், அலுவலர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.