மணிப்பூர் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை கண்டித்து செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் இடதுசாரி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சேஷாத்திரி தலைமையில் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் ப.சு.பாரதி அண்ணா மற்றும் சிபிஐ, சிபிஐஎம்எல் லிபரேசன், பாட்டாளி வர்க்க சமரன் அணி உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.