districts

திருச்சி முக்கிய செய்திகள்

கீற்று வீடுகளில் தீ விபத்து

பாபநாசம்,  ஜூலை 23 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த ராஜகிரி பெரியார் தெரு வில் வசிப்பவர்கள் ஜான் சன், வீமையன், கித்திரி யம்மாள். இவர்களது கீற்று வீடுகளின் பின்  பக்கமிருந்த மூங்கில் குத்து மூலம் கீற்று களுக்கு தீ பரவியது. இதில் வீட்டிலிருந்த துணி கள், பாத்திரங்கள் உட்பட  அனைத்தும் தீயில் கரு கின. பாபநாசம் தீய ணைப்பு நிலையத்தினர் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். இந்த விபத்தில் பாதிக் கப்பட்ட வர்களுக்கு, பாப நாசம் தாசில்தார் செந்தில் குமார் அரசின் நிவாரண  உதவியை வழங்கினார். ராஜகிரி ஊராட்சித் தலை வர் முபாரக் ஹுசைன், ஊராட்சி செயலர் ஜெயக் குமார் ஆகியோர் உட னிருந்தனர்.

மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 23 - மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்டம் மண் ணச்சநல்லூர் மேற்கு ஒன்றியக்குழு சார்பில் எதுமலை பிரிவு சாலை  அருகே கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றி யக்குழு உறுப்பினர் சேகர் தலைமை வகித் தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நடரா ஜன், பன்னீர்செல்வம், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் பூமாலை, ஆனை முத்து ஆகியோர் கண்டன  உரையாற்றினர். ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து  கொண்டனர். ராம கிருஷ்ணன் நன்றி கூறினார்.

மாற்றுத் திறனாளிகள் மருத்துவ முகாம் 

தஞ்சாவூர்,  ஜூலை 23-  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் மாற்றுத்திற னாளி களுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு  மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடை பெற்றது. மாற்றுத்திற னாளிகள் நல மாவட்ட அலுவலர் சீனிவாசன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அனைத்து  வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப் போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் ஏ. மேனகா, மாவட்டத் துணைச் செயலாளர் சி.ஏ  சந்திரபிரகாஷ், முன்னாள்  மாவட்ட துணைத் தலை வர் கே.கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியத் தலைவர்கள் பாலசுப்பிரமணியன் (மதுக்கூர்), மணிகண்டன் (பட்டுக்கோட்டை), எஸ்.ஜே.ராஜேஷ் கண்ணா (சேதுபாவாசத்திரம்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எலும்பு முறிவு மருத் துவர் நவீன், மனநல மருத்துவர் துளசி பிருந்தா, கண் மருத்துவர் கா மேஸ்வரி, காது மூக்கு  தொண்டை மருத்துவர் கலைவாணி, குழந்தை கள் நல மருத்துவர் தீபா  லெட்சுமணன் உள்ளிட் டோர் மாற்றுத்திறனாளி களை பரிசோதனை செய்து, அதனடிப்படை யில் 50 பேருக்கு மாற்றுத் திறனாளி அடையாள அட்டை வழங்கப்பட்டது. 44 பேருக்கு தேசிய மாற்றுத்திறனாளி அடை யாள அட்டைக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் அரசு ஊழியர்களை ஈடுபடுத்துவதா?

மமக தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம்

பாபநாசம், ஜூலை 23 - ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் அரசு ஊழியர்களை ஈடுபடுத்துவதற்கு மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவ ரும், பாபநாசம் எம்.எல்.ஏ-வுமான  ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித் துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய விடுதலைக்குப் பிறகு,  ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மூன்று முறை  இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக் கிறது. 1966 இல் அதிகாரப்பூர்வமாக ஆர்.எஸ்.எஸ் நடவடிக்கைகளில் அரசு  ஊழியர்கள் பங்கேற்கத் தடை விதிக்கப் பட்டது. அரசு ஊழியர்களாக இருப்பவர்கள், எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினர் களாக இருக்கக் கூடாது என்பது அரசு  விதி. அதன்படி தற்போது வரை ஒன்றிய- மாநில அரசு மற்றும் பொது நிறுவனங் களில் இந்த விதி பின்பற்றப்பட்டு வரு கிறது. இந்நிலையில் அரசு ஊழியர்கள்  ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேரும்  வகையில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக செய்திகள் தெரிவிக் கின்றன. இந்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக தெரி கிறது. வேற்றுமையில் ஒற்றுமை காணும்  இந்தியத் திருநாட்டில், சமூக ஒற்றுமை யைக் குலைக்கின்ற வகையில், அடிப்படைவாத செயல்பாடுகளில் தொ டர்ந்து ஈடுபட்டு வரும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் அரசு ஊழியர்களை பணி யாற்ற அனுமதிப்பது, இந்தியாவின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாக  அமையும். 58 ஆண்டு கால தடையை தற்போது நீக்க ஒன்றிய அரசுக்கு என்ன  அவசியம் ஏற்பட்டுள்ளது?  மதமாச்சரியங்களுக்கு அப்பாற் பட்டு நடுநிலையோடு அரசு ஊழியர்கள்  செயல்படுவதை மாற்றுகிற வகையில், இந்த அனுமதி அமைந்துவிடும். பல்வேறு துறைகளில் ஆர்.எஸ்.எஸ்  பாசிச சிந்தனையாளர்கள் ஊடுருவி இருக்கும் நிலையில், அவர்களைக் களை எடுப்பதற்குப் பதிலாக சுதந்திர மாகச் செயல்படுவதற்கான அங்கீ காரத்தை ஒன்றிய அரசு இந்த நடவ டிக்கை மூலம் வழங்குகிறது. உடனடி யாக இந்த உத்தரவை திரும்பப் பெற  வேண்டும். இந்தியா கூட்டணி தலை வர்கள் இந்த ஆணைக்கு எதிராக கடு மையாக களமாட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சாலையோர மரத்தில் மோதிய கார்: தந்தை-மகள் உட்பட 3 பேர் பலி

கரூர், ஜூலை 23- ஈரோடு மாவட்டம், சூலை ஜி.கே.ஆர் நகரைச் சேர்ந்தவர்  கிருஷ்ணகுமார்(42). இவர் தனது  மனைவி மோகனா (40),  மாமியார் இந்திராணி (67) மற்றும் மகள் வருணா(10), மகன்  சுதர்சன் (15) ஆகியோருடன் கடந்த ஜூலை 20 அன்று ஈரோட்டில் இருந்து திருச்செந்தூர் கோயிலுக்கு  குடும்பத்து டன் சென்றுள்ளனர். திருச்செந்தூரில் வழிபாட்டை முடித்து விட்டு திங்கட்கிழமை  அதிகாலை ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தனர். காரை கிருஷ்ணகுமார் ஓட்டி வந்தார். மதுரை-சேலம் தேசிய  நெடுஞ்சாலையில், அரவக்குறிச்சி அருகே ஆண்டிப்பட்டி கோட்டை என்ற இடத்தில் அதிகாலை 3.30 மணியளவில் கார்  வந்து கொண்டிருந்த போது, திடீரென நிலை தடுமாறி சாலையோரம் இருந்த மரத்தின் மீது கார் மோதியது. இதில் காரின் முன் பக்கம் முழுவதும் சேதமடைந்தது.  இந்த விபத்தில் கிருஷ்ணகுமாரும், மகள் வருணா மற்றும்  மாமியார் இந்திராணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயி ரிழந்தனர். மேலும் மனைவி மோகனா மற்றும் மகன் சுதர்சன்  ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து  சம்பவ இடத்திற்கு வந்த அரவக்குறிச்சி போலீசார் படுகாயம்  அடைந்த மோகனா மற்றும் சுதர்சன் ஆகியோரை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி  வைத்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை  மீட்டு உடற்கூறாய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடல் அட்டைகளை  வைத்திருந்தவர் கைது 

தஞ்சாவூர், ஜூலை 23 -  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட, சேதுபாவாசத்திரம் கடற்கரைப் பகுதியில் தடை செய்யப்பட்ட அரியவகை கடல் வாழ் உயிரினமான கடல் அட்டைகளை விற்பனைக்காக வைத்திருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது.  அதன்பேரில், சேதுபாவாசத்திரம் கடலோரக் காவல் படை ஆய்வாளர் மஞ்சுளா தலைமையில், காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகர், தலைமைக் காவலர் கோபால், காவலர்  அந்தோணி தேவராஜ் ஆகியோர் சோதனை மேற்கொண்ட னர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரைப்  பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர் அதே பகுதியைச்  சேர்ந்த நீலகண்டன் (50) என்பதும், அவர் 140 எண்ணிக்கை யிலான சுமார் 40 கிலோ எடையுள்ள கடல் அட்டைகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரை கடலோரக் காவல் படையினர் பிடித்து,  பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் ஏ.எஸ். சந்திரசேகர னிடம் ஒப்படைத்தனர். பின்னர், தஞ்சை மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி  உத்தரவின்படி, வன உயிரின குற்ற வழக்கு (எண்- 4/2024)  பதிந்து பேராவூரணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை  விசாரித்த நீதிபதி அழகேசன், 15 நாட்கள் நீதிமன்றக் காவலில்  வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, நீலகண்டன் புதுக் கோட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

பொது தொழிலாளர் சங்க  பேரவையில் நிர்வாகிகள் தேர்வு

அரியலூர், ஜூலை 23 - அரியலூர் மாவட்ட பொது தொழிலாளர் சங்க 2 ஆவது  மாவட்ட பேரவை ஜெயங்கொண்டம் ஜூப்ளி சாலையில்  நடைபெற்றது.  மாவட்டத் துணைத் தலைவர் ஆர்.சிற்றம்பலம் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் துரை சாமி வாழ்த்துரை வழங்கினார். மாவட்டச் செயலாளர் எஸ்.மெய்யப்பன் செயலர் அறிக்கையை வாசித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் கே.கிருஷ்ணன் பேரவையை  தொடங்கி வைத்து உரையாற்றினார். சிஐடியு மாவட்டப்  பொருளாளர் கே.கண்ணன், மாவட்டத் துணைத் தலை வர்கள் பேசினர். அரியலூர் மாவட்ட பொது தொழிலாளர் சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, தலைவ ராக ஆர்.ரவீந்திரன், செயலாளராக எஸ்.மெய்யப்பன், பொருளாளராக கே.முருகேசன், துணை தலைவர்களாக கே.கவிதா, எஸ்.நூர்பானு, துணைச் செயலாளர்களாக கே.சண்முகசுந்தரம், என்.செல்வராஜ் நிர்வாக குழு உறுப்பினர்களாக அனிதா, சங்கர், சத்யா, தனலட்சுமி, பவானி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். சிஐடியு மாநில துணைத் தலைவர் எஸ்.ரங்கராஜன் நிறைவுரை ஆற்றினார். சங்கத் தலைவர் ஆர்.ரவீந்திரன்  நன்றி கூறினார்.

மனநலம் பாதிக்கப்பட்ட  சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: முதியவர்கள் 3 பேர் கைது

அரியலூர், ஜூலை 23- அரியலூர் மாவட்டத்தில் சற்றே மனநலம் பாதிக்கப் பட்ட 6 ஆம் வகுப்பு பயிலும் 13 வயது சிறுமி ஒருவர்,  கடந்த ஜூலை 21 (ஞாயிறு) அன்று பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளார். அப்போது சிறுமியின் தாயார் கூலி வேலைக்குச் சென்ற நிலையில், திரும்பி வீட்டிற்கு வந்த போது, அருகில் இருந்தவர்கள் ‘உங்கள்  வீட்டில் கூட்டமாக இருந்தது என்றும் தங்களது மகளை  கூப்பிட்டு விசாரிக்கும்படியும்’ கூறினர்.  இதனையடுத்து சிறுமியிடம் விசாரித்த போது, ராஜேந்திரன், பன்னீர்செல்வம், சின்னத்தம்பி ஆகியோர் சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த தாகவும், போட்டி போட்டு மிரட்டி மாறி மாறி வன்கொடுமை  செய்ததாகவும் சிறுமி தாயாரிடம் கூறி அழுதுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் 1098 என்ற இலவச எண்ணுக்கு புகார் தெரிவித்து, வன்கொடுமை செய்த நபர்கள் மீது நடவடிக்கை கோரி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  அதன்பேரில், குற்றவாளிகளான ராஜேந்திரன் (65), பன்னீர் செல்வம் (76), சின்னத்தம்பி (70) ஆகிய மூன்று பேர்  மீதும் வழக்குப் பதிந்து, அவர்களை போக்சோ சட்டத்தில்  கைது செய்து சிறையில் அடைத்தனர்.

3 மாத ஊதியத்தை வழங்குக! அரசு கல்லூரி கௌரவ  விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

அறந்தாங்கி, ஜூலை 23 - புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூரில் இயங்கி வரும் அரசு கலை  மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் கௌரவ விரி வுரையாளர்கள் தமிழ்த்துறை பேராசிரியர் கணேஷ்  குமார் தலைமையில், கல்லூரி வாயிலில் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். மூன்று மாதமாக வழங்கப்படாத ஊதியத்தை உடனடி யாக வழங்க கோரியும், பல்கலைக்கழக மானியக் குழு  பரிந்துரை மற்றும் உயர்நீதிமன்ற ஆணையின்படி கௌரவ  விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.50 ஆயிரம் ஊதியம்  கோரியும், நீண்ட காலமாக கல்வித் தகுதியோடு பணி புரிந்து கொண்டிருக்கும் கௌரவ விரிவுரையாளர்களை நிரந்தரப்படுத்த  கோரியும், அவர்களின் பணி பாது காப்பை உறுதிப்படுத்த கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜூலை 26 தஞ்சையில்  விவசாயிகள் குறைதீர் கூட்டம் 

தஞ்சாவூர், ஜூலை 23 -  தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்  கூட்டம் ஜுலை 26 (வெள்ளிக்கிழமை) அன்று காலை  10 மணிக்கு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட  வளாகம், கீழ்த்தளத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம்  தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங் கள் குறித்து திட்ட விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளது.  இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும்  விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் விவசாயம் தொடர்புடைய கருத்துகளை தெரிவிக்க வேண்டும். கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துகளை தெரி விக்க விரும்பும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதி நிதிகள், தங்கள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு  செய்து கொள்ள வேண்டும். விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல்  பெற்று, பின்பு மனுக்களை அளிக்க வேண்டும் என  மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்து உள்ளார்.

மாற்றுத்திறனாளிக்கு வீடு கட்டித் தர நிதி ஒதுக்கீடு

பாபநாசம், ஜூலை 23 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே கீழ வழுத்தூர் கிராமத்தில் மாற்றுத்திறனாளி சதாசிவம் என்ப வரின் தொகுப்பு வீடு முழுவதும் சேதமடைந்த நிலையில்  இருந்தது.  இதற்காக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்கத்தின்  முயற்சியால், சதாசிவத்துக்கு வீடு கட்டித் தர ரூ.3.50  லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டை  பெற உதவிய பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சுதா விற்கு சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், மேலவழுத்தூர், கீழமாஞ்சேரி ஆகிய கிராமங்க ளில் பழுதடைந்த தொகுப்பு வீடுகளை தரமாக கட்டித் தர  வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.  இதில் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் அன்பு மணி, பாபநாசம் ஒன்றிய பொறுப்பாளர்கள் பங்கேற்ற னர்.

117 ஆவது ஆண்டு விழா

பாபநாசம், ஜுலை 23 - பரோடா வங்கியின் 117 ஆவது ஆண்டு விழா, தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் பரோடா வங்கிக் கிளையில் நடந்தது. இதில்  திமுக மெலட்டூர் பேரூர் செயலர் சீனு, ஊராட்சி மன்றத் தலை வர்கள் கொத்தங்குடி பழனி, கோவத்தக்குடி கோவிந்தராஜ் ஆகி யோர் பேசினர். வாடிக்கையாளர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப் பட்டது. இதில் வங்கி கிளை மேலாளர் ரேவதி உட்பட வங்கி வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர்.

ஜூலை 30 சென்னை போராட்டத்தை விளக்கி வாயிற்கூட்டம்

திருவாரூர், ஜுலை 23 - தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழி லாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் திருவாரூர் நுகர்பொருள் வாணிப  கழக மண்டல அலுவலகம் முன்பு  ஜூலை 20 வரை மாநிலம் தழு விய கையெழுத்து இயக்கம் மற்றும் ஜூலை 30 அன்று சென் னையில் நடைபெறும் மாபெரும்  உண்ணாவிரத போராட்டத்தை விளக்கி வாயிற் கூட்டம் நடை பெற்றது. பொது விநியோகத்தை பலப் படுத்தி, பொது விநியோகத்தில் உள்ள குறைபாடுகளை நீக்க  வேண்டும். காலிப் பணியி டங்களை நிரப்ப வேண்டும். தமி ழகம் முழுவதும் தற்பொழுது காலியாக உள்ள பணியிடங்க ளில் 12(3) ஒப்பந்தத்தின் படி 2013  ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டுவரை உள்ள பருவகால பணியிடங்களை பணி நிரந்த ரம் செய்ய வேண்டும். நவீன  அரிசி ஆலைகளை நவீனப்படுத் துவதும், காலியாக உள்ள ஆப ரேட்டர், டெக்னிசியன்கள் பணியி டங்களை உடனே நிரப்பவும் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை  வலியுறுத்தி வாயிற் கூட்டம் நடை பெற்றது. மண்டல தலைவர் கே.எஸ்.இராஜா தலைமை வகித்தார். மாநில பொருளாளர் எம்.ஏழு மலை, சிஐடியு மாவட்டச் செய லாளர் டி.முருகையன், மாவட்டத்  தலைவர் எம்.கே.என்.அனிபா, மண்டல செயலாளர் சி.ஆர்.அண்ணாதுரை மற்றும் மண்டல நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர்