districts

img

திரிபுராவில் பாஜக-ஆர்எஸ்எஸ் வன்முறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் தொண்டர்கள் மீது பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பல் நடத்தும் வன்முறை வெறியாட்டத்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  சார்பில் திருச்சிராப்பள்ளி மரக்கடை ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மலைக்கோட்டை பகுதிச் செயலாளர் பா.லெனின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஶ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.ரெங்கராஜன், மாமன்ற உறுப்பினர் எஸ்.சுரேஷ், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வெற்றிச்செல்வம், கார்த்திக், ராமசந்திரன், மற்றும் வேலுச்சாமி, சிவக்குமார், சரஸ்வதி, தர்மா, சந்தானம், சீனிவாசன், சரஸ்வதி, மணிமாறன், கரிகாலன், ஜோன்ஸ்,  மகேந்திரன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.