districts

img

அரசு ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்

புதுக்கோட்டை, ஜூலை 25 -

       ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்களுடன் அரசு  நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்ட கோரிக்கை களை நிறைவேற்றக் கோரி அரசு ஊழியர்கள் திங்கள்கிழமை  பேரணி நடத்தினர்.

   புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மாநகராட்சி, நகராட்சிகளில் நிரந்தரப் பணியிடங்களை அழித்திடும் அரசாணை 152-ஐ ரத்து செய்ய வேண்டும். கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அகவிலைப்படி, சரண்டர் விடுப்பு உள்ளிட்டவற்றை திரும்பக் கொடுக்க வேண்டும். பள்ளிகளில் காலை சிற்றுண்டித் திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக செயல்படுத்த வேண்டும். தொகுப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும். சாலைப் பணியாளர் களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க  வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன.

     புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் நடந்த பேரணிக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சே.ஜபருல்லா தலைமை வகித்தார். பேர ணியை துவக்கி வைத்து அரசு அனைத்துத்துறை ஓய்வூதி யர் சங்க மாவட்டத் தலைவர் எம்.முத்தையா பேசினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் இரா.ரெங்கசாமி பேசினார். மாநிலச் செயலாளர் ச.ஹேமலதா நிறைவுரையாற்றினார்.  

திருச்சிராப்பள்ளி

    திருச்சி மாவட்டக் குழு சார்பில் நடந்த பேரணிக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பால் பாண்டி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி  மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட துணைத்  தலைவர்கள் அமுதவள்ளி, அல்போன்ஸா, மாநில துணைத் தலைவர் பெரியசாமி ஆகியோர் பேசினர். முன்னதாக பேர ணியை முன்னாள் மாநில துணைத்தலைவர் சந்திரசேகர் துவக்கி வைத்தார். பேரணி வெஸ்ட்ரி பள்ளி அருகிலிருந்து புறப்பட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நிறை வடைந்தது.  

கரூர்

    சங்கத்தின் கரூர் மாவட்ட குழு சார்பில், கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் இருந்து தலைமை தபால் அலுவலகம் முன்பு  வரை கோரிக்கை விளக்க பேரணி நடைபெற்றது. பின்னர் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.எஸ்.அன்பழகன் தலைமை வகித்தார். சங்கத்தின் மாநில முன்னாள் துணைத் தலைவர் மு.சுப்ரமணியன் பேர ணியை துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் கெ.சக்திவேல் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.