திருச்சிராப்பள்ளி, ஏப்.10- ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் திங்களன்று காலி பால் புட்டியுடன் பாலக்கரை ரவுண்டானா அருகில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு வாலிபர் சங்க பாலக் கரை பகுதி செயலாளர் சோலைராஜன், மாதர் சங்க பாலக்கரை பகுதி தலைவர் சாந்தா ஆகியோர் தலைமை வகித்தனர். வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் லெனின், மாவட்டச் செயலாளர் சேதுபதி, மாவட்டப் பொருளா ளர் நவநீதகிருஷ்ணன், மாவட்டத் துணைச் செயலாளர் நிவேதா, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சரஸ்வதி, மாவட்டத் தலைவர் பொன்மகள், மாவட்டப் பொருளாளர் ராஹீலா, பாலக்கரை பகுதி கலாராணி ஆகி யோர் பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.